புதன், 25 நவம்பர், 2009

இயேசு கிறிஸ்துவைப் பற்றிய உண்மை

டாக்டர் மனேஹ் ஹாமத் அல்ஜொஹானி
முன்னுரை :
இஸ்லாம் மார்க்கத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடு இயேசு கிறிஸ்துவின் பாத்திரத்தைப் பற்றியதாகும். இந்தக் கருத்து வேறுபாடுகள் தான் இரண்டு மார்க்கத்தையும் பிரித்து வைத்திருப்பது.
இயேசு கிறிஸ்துவை - முஸ்லிம்கள் - ஆப்ரகாம், மோசஸ், முஹம்மது நபி போன்றவர்களை மதிப்பது போல் அவர் மிகப் பெரிய தீர்க்கதரிசி, இறைவனின் தூதர் என்று மதிப்பு அன்பு செலுத்துகின்றனர்.
கிறிஸ்துவர்கள், இதற்கு மாறாக, இயேசுவைக் கடவுள் என்றும் கடவுளின் குமாரர் என்றும் கருதுகின்றனர். இஸ்லாமியர்கள் இந்தக் கொள்கையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ இயேசு ஒரு போதும் கூறிக் கொள்ளவில்லை என்று இஸ்லாம் போதிக்கின்றது. இயேசுவின் பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த கிறிஸ்துவ மார்க்கத்தின் முக்கிய கொள்கைகளை இஸ்லாம் முழுமையாக நிராகரிக்கிறது. அவை என்ன?
1. திரி ஏகத்துவம் (முத்தெய்வக் கொள்கை - பிதா, மகன், பரிசுத்த ஆவி)
2. இயேசுவின் கடவுள் தன்மை
3. கடவுளின் குமாரன் என்ற கிறிஸ்துவின் அந்தஸ்து!
4. ஜென்மப்பாவம் அல்லது முதற்பாவம்
5. பாவ மன்னிப்பு
மேற்சொன்ன கொள்கை எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு இறைவன் அளிக்க விரும்பிய தகுதிக்கு அதிகமாக அவரை மிக மிக உயர்த்திக் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் விளைவுகள் என்பது தெளிவாகும். இந்த அதீதமான - அளவுக்கு அதிகமான கொள்கைகள் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் இஸ்லாம் மார்க்கத்திற்குமுள்ள ஒற்றுமைகளைப் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.
Þ தூய கன்னிக்கு (மேரிக்கு)ப் பிறந்தவர் இயேசு!
Þ தொட்டிலில் இருக்கும் போதே இயேசு பேசினார்
Þ அற்புதங்களைச் செய்தவர் இயேசு
Þ இயேசு கிறிஸ்து இரண்டாம் முறையாக உலகிற்கு வருவார்
இதை எல்லாம் முஸ்லிம்கள் நம்புகின்றார்கள் என்ற உண்மையை கருத்துவேறுபாடுகள் மறைத்து விடுகின்றன.

இந்த சிறுநூலில் வருகின்ற இரண்டு கட்டுரைகள் இயேசு நாதர் பற்றிய இஸ்லாம் வரைகின்ற உண்மையாக ஓவியத்தைத் தர முயல்கின்றன. கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் மூலாதாரமான உபதேசங்களிலிருந்து மாறுபாடுகின்றார்கள் என்பதையும் எடுத்துக் கூறுகின்றன.
முதற் கட்டுரை - கிறிஸ்துவ மார்க்கத்தின் பிடியில் இப்போதும் இருக்கின்ற மேதைகளும் சிந்தனையாளர்களும் இயேசுநாதர் பற்றி இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை மெல்ல மெல்ல ஒப்புக் கொள்வதை எடுத்துக் சொல்கிறது.
இன்னமும் அவர்கள் பைபிள் பற்றி விரிவாகவும் விஞ்ஞானக் கண்ணோட்டத்தோடும் ஆராய்வார்களானால் இஸ்லாம் கூறுகின்ற கருத்துக்களை இன்னமும் தெளிவாக ஒப்புக் கொள்வார்கள். காலம் செல்லச் செல்ல இஸ்லாமிய உண்மை மிகத் தெளிவான ஒளியோடு அவர்களுக்கு விளங்கும்.
புனிதக் குர்ஆன் இதைக் கீழ்கண்ட வரிகளில் கூறுகின்றது.
நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம். (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?அறிந்து கொள்க் நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பது குறித்துச் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்க் நிச்சயமாக அவன் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்து (அறிந்தவனாக) இருக்கிறான். (அல்குர்ஆன் 41:53)
தகவுரை :
இயேசு நாதரைப் பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கண்ணோட்டம் இருவேறு தீவிர கருத்துக்களுக்கு இடையில் இருக்கின்றது. யூதர்கள் - இயேசு நாதரை இறைவனின் தூதுவர் அல்ல என்றும் - கள்ளத் தீர்க்கதரிசி என்றும் நிராகரிக்கின்றார்கள். கிறிஸ்தவர்களோ இயேசு நாதரை இறைவனின் குமாரர் எனக் கூறி வணங்கவும் செய்கின்றனர். ஆனால் இஸ்லாம் இயேசு நாதரை இறைவனின் உயரிய இறைத்தூதர் எனக் கருதுகிறது. ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மது நபி போன்றோரை மதிப்பது போல் மதிக்கின்றது.இஸ்லாமின் இந்தக் கருத்து ஓரிறைத் தத்துவத்திற்கு ஓரிறைவனின் தெய்வ வழிகாட்டுதலுக்கும் இறைத்தூதர்களின் ஓரிறைச் செய்திக்கும் ஏற்புடையதாக இருப்பதைக் காணலாம்.
இறைநாட்டத்திற்கு முழுமையாக சரண் அடைதல் எனும் இந்த இஸ்லாமியத் தத்துவம் இறைவனால் ஆதி மனிதரான ஆதமுக்குத் தரப்பட்டு அவரது வழி வந்தோருக்கும் போய்ச் சேர்ந்தது. ஆப்ரஹாம், மோஸே, இயேசு இறுதியாக முஹம்மது நபி என்ற வரிசைப்படி வந்த இறைத்தூதர்களுக்கு -மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு - மனிதனுக்கும் மனிதர்க்கும் உள்ள உறவு – மனிதருக்கும் சுற்றுச்சார்புக்கும் இருக்கும் உறவு பற்றிக் கூறப்பட்டது. இறைக்கட்டளையின்படி மனிதன் இந்த உறவுகளோடு எப்படி வாழ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. எனவே, வேதங்கள் வெளிப்பட்ட மதங்களிலேயே தோன்றியிருக்கின்ற வேறுபாடுகள் எல்லாம் மனிதன் உருவாக்கி நுழைத்த வேறுபாடுகளே என்று இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் பாத்திரத்தைப் பற்றி யூத – கிறிஸ்துவ - இஸ்லாம் மார்க்கங்கள் வேறுபாடு கொண்டிருப்பதற்கும் இது விதிவிலக்கல்ல. திருக்குர்ஆன் இயேசுவைப் பற்றி விரிவான வாழ்க்கை வராலாற்றைக் கூறவில்லை. எனினும் அவர் பிறப்பு மேன்மை, அவரது இறைச் செய்தி அவரது வின்னேற்றம், அவரைப் பற்றிய கிறிஸ்தவ நம்பிக்கைகள் மீதான தீர்ப்புகள் ஆகியவை பற்றி முக்கிய விபரங்களை எடுத்துக் கூறுகிறது.
மேரி (மர்யம்) இயேசுவைப் பற்றிய குறிப்பு திருக்குர்ஆனில் அவரது அன்னை மேரி (மர்யாள் - மர்யம்)ன் கர்ப்பம் கொள்வதிலிருந்து தொடங்குகிறது. மேரியின் தாயான (இம்ரானின் மனைவி) தனது மகள் மேரியை கோவிலில் கடவுளின் சேவைக்கு ஒப்படைப்பதாக நேர்சை செய்கிறாள். ஜக்கரிய்யா மேரியை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். மேரியோடு உணவருந்துவதை ஜக்கரிய்யா பழக்கமாகக் கொள்கிறார். இந்த உணவு உனக்கு எங்கிருந்து வருகின்றது என்று ஜக்கரிய்யா ஒருமுறை கேட்க - கடவுளிடம் இருந்து வந்தது - என்று மேரி பதிலுரைக்கின்றார்.
இதுபற்றி திருக்குர்ஆன் வசனம் வருமாறு :
இம்ரானின் மனைவி ''என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்'' என்று கூறியதையும்- (பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும். ''என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்'' எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள். அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான். ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்.) ''அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன். இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.
அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான். அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான். அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், ''மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?'' என்று அவர் கேட்டார். ''இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்'' என்று அவள்(பதில்) கூறினாள்.
அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார். ''இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.''
அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து; ''நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான். அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும் இருப்பார்'' எனக் கூறினர்.
அவர் கூறினார். ''என் இறைவனே! எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும்? எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது; என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்.'' அதற்கு (இறைவன்), ''அவ்வாறே நடக்கும். அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்'' என்று கூறினான். ''என் இறைவனே! (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக!'' என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), ''உமக்கு அறிகுறியாவது; மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர்! நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து; அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக!'' என்று கூறினான். (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்'' (என்றும்), ''மர்யமே! உம் இறைவனுக்கு ஸுஜுது செய்யும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக'' (என்றும்) கூறினர்.
(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம். மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார்.
''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:35-47)
மேரி வயதடைந்த பின்னர் பரிசுத்த ஆவி (வானவர் தலைவர் கேப்ரியல்) மனித உருவத்தில் வந்து மேரிக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகும் செய்தியைக் கூறுகிறார். இது பற்றிய உரையாடலை திருக்குர்ஆன் தருகிறது.
மலக்குகள் கூறினார்கள். ''மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ். மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். ''மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசவார். இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.'' (அச்சமயம் மர்யம்) கூறினார். ''என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?'' (அதற்கு) அவன் கூறினான். ''அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.'' (அல்குர்ஆன் 3:45-47)
அதிசய அற்புதமாக மேரி அந்தக் குழந்தையை கருத்தரித்ததும் தொலை தூரத்திற்குப் போய் பிரசவத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். (மர்யம்) என்ற தலைப்பிலுள்ள குர்ஆன் அத்தியாயம் நமக்கு மேரி எத்தகைய மன உணர்வுகளைப் பெற்றாள் - குழந்தையான இயேசுவை எடுத்துக் கொண்டு வீடு திரும்பும் போது மேரியிடம் அவர் என்ன பேசினார் என்பதை எடுத்துக் கூறுகின்றது.
பின்னர் மர்யமுக்கு கர்ப்பம் ஏற்பட்டு கர்ப்பத்துடன் தூரத்திலுள்ள ஒரு இடத்ததைச் சென்றடைந்தார். பின்பு அவருக்கு பிரசவ வேதனை ஏற்பட்டு ஒரு பேரீச்சை மரத்தடியில் சென்ற போது - இதற்கு முன்பாகவே நான் இறந்திருக்க வேண்டாமா? முற்றிலும் நாம் மறக்கடிக்கப்பட்டிருப்பேனே! என்று கூறினார்.
அடிப்புறத்திலிருந்து (ஜிப்ரயீல்) சத்தமிட்டு நீர் கவலைப்படாதீர்! உமக்கு சமீபமாக உம் இறைவன் ஓர் ஊற்று உதித்தோடச் செய்திருக்கிறான். இப்பேரீச்சை மரத்தின் கிளையை உன் பக்கம் பிடித்து உலுக்கு! அது பழுத்த பழங்களை உன் மீது சொறியும். நீ புசித்துக் குடித்து எந்த ஒரு மனிதரைக் கண்ட போதும் - நிச்சயமாக நான் அருளாளனுக்கு நோன்பு நோற்கிறேன் - எனக் கூறிவிடு.
பின்னர் மர்யம் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு மக்களிடம் வரவே அவர்கள் - மர்யமே! மர்யமே! நீ நிச்சயமாக மகா கெட்ட காரியத்தைச் செய்து விட்டாய். ஹாரூனின்; சகோதரியே! உன் தாயும் கெட்ட நடத்தை உடையவராக இல்லையே! என்று கூறினார்கள்.
(மர்யம் குழந்தை இருந்த) அதன் பக்கம் ஜாடை காண்பித்தாள். அதற்கு அவர்கள் - மடியில் இருக்கும் சிறு குழந்தையிடம் நாங்கள் எவ்வாறு பேசுவோம் என்று கூறினார்கள். (குழந்தை இயேசு) கூறியதாவது : நிச்சயமாக நான் இறைவனின் அடிமை, அந்த இறைவன் எனக்கு ஒரு வேதத்தைக் கொடுத்து நபியாகவும் ஆக்குவான். நான் எங்கிருந்த போதிலும் அவன் என்னை மிக்க பாக்கியமுள்ளவனாக ஆக்குவான்! நான் உயிர் வாழும் வரையிலும் தொழுகையை கடைபிடித்து ஒழுகும்படியும், ஜகாத் கொடுத்து வரும்படியும் அவன் எனக்கு உபதேசித்து இருக்கிறான்.
என்னுடைய தாயுக்கு நான் நன்றியுள்ளவனாகவும், நான் முரடனாகவோ வழி தப்பியவனாகவோ ஆகாதபடி செய்வான். நான் பிறந்த நாளிலும் நான் மரிக்கும் நாளிலும் உயிர் பெற்று எழும் நாளிலும் நான் சாந்தமும் சமாதானமும் என் மீது நிலை பெற்றிருக்கும். (அல்குர்ஆன் 19: 22-33)
மேற்சொன்ன திருக்குர்ஆனின் அத்தியாயத்திலேயே இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் உலகத்திற்கும் இயேசுவைப் பற்றிய உண்மை இது தான் என்று உறுதி அளிக்கிறான். கிறிஸ்துவர்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்றும் இயேசு - மேரியின் மகன் மட்டுமே என்பதை இறைவன் வலியுறுத்துகின்றான். திருக்குர்ஆன் வசனம் தொடர்கிறது.
இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்); எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், ''அகக!'' என்று தான் கூறுவான். (உடனே) அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் 19:34-35)
இயேசுவின் உண்மையான - இயற்கை நிலை இது என அழுத்தம் திருத்தமான முறையில் நிலைநாட்டிய இறைவன் கிறிஸ்தவர்களை விவாதத்திற்கு அழைக்குமாறு முஹம்மது (ஸல்) அவர்களைப் பணிக்கிறான். அவர்களை ஒரே இறைவனைத் தொழ வருமாறு ஆணை பிறப்பிக்கிறான்.
இறைவன் தான் என்னைப் படைத்து பேணிப் பாதுகாப்பவன். அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (அல்குர்ஆன் 19:36)
கடவுளுக்கு குமாரர் உண்டு என்ற கருத்தை நிராகரிக்கும் போது இந்த அத்தியாயத்தில் வலிமையான சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன.
(கிறிஸ்தவர்களாகிய) அவர்கள் - அருளாளனாகிய இறைவன் தனக்கு ஒரு மகன் எடுத்துக் கொண்டவர் எனக் கூறுகின்றனர்.
நிச்சயமாக (கிறிஸ்தவர்களாகிய) நீங்கள் பெரியதோர் அபாண்டத்தைக் கூறுகிறீர்கள். வானங்கள் வெடித்துப் போகவும், பூமி வெடித்துப் போகவும், மலைகள் இடிந்து சரிந்து விடவும் கூடும். இறைவனுக்கு சந்ததி உண்டென்று அவர்கள் கூறுவதன் காரணமாக! சந்ததி எடுத்துக் கொள்வது இறைவனுக்குத் தகுமானதல்ல. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் ஒவ்வொன்றும் இறைவனிடம் அடிமையாகவே இருந்து வருகின்றது (அல்குர்ஆன் 19:88-93)
திருக்குர்ஆன் இயேசுவுக்கு மனித உருவிலான தந்தை இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இந்த ஒப்புதல் உறுதி - இயேசுவை கடவுளின் குமாரர் ஆக்கவில்லை.(தந்தை இல்லாதவர் கடவுளின் குமாரர் என்று ஒப்புக் கொள்ளும்) இந்தத் தகுதியை வைத்துப் பார்த்தால் (முதல் மனிதரான) ஆதம் - இயேசுவை விட கடவுளின் குமாரர் என்று ஆகி விடத் தகுதியுடையவராகி விடுவார். ஏனெனில் ஆதமுக்குத் தந்தையும் இல்லை, தாயும் இல்லை. ஆக திருக்குர்ஆன் அதிசய அற்புதமான இரு படைப்புகளை (ஆதம் - இயேசு) பற்றிக் கூறி கவனத்தை ஈர்க்கிறது.
அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே; அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் ''குன்'' (ஆகுக) எனக் கூறினான். அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் 3:59)

கடவுளின் குமாரர் இயேசு என்ற கருத்தை மறுப்பது போலவே திருக்குர்ஆன் (பிதா - மகன் - பரிசுத்த ஆவி என்ற) திரியேகத் தத்துவத்தையும் மறுக்கிறது.
ஏனெனில் இறைவன் ஒருவனே! இது தான் ஓரிறைத் தத்துவத்தின் அனைத்து வெளிப்பாடுகளுக்கும் அடிப்படை. காரணகாரியப்படிப் பார்த்தாலும் - சாதாரணமான கூட்டல் கணக்குப்படி பார்த்தாலும் மூன்று (பிதா - மகன் - பரிசுத்த ஆவி) என்பது ஒன்று என ஆகாது.
பெண்கள் (அந்நிஸா) என்ற அதிகாரத்தில் உள்ள கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் குர்ஆன் கூறுகிறது :
வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள். நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான். இன்னும் (''குன்'' ஆகக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான். (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான். ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள். இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள். (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான். அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்., பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ள மாட்டார்கள். எவர் அவனுக்கு (அடிமையாய் ) வழிபடுதலைக் குறைவாக எண்ணி, கர்வமுங் கொள்கிறார்களேர். அவர்கள் யாவரையும் மறுமையில் தன்னிடம் ஒன்று சேர்ப்பன். ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:171-173)
மக்களை - ஆம்! அனைத்து மக்களையும் முஹம்மது (ஸல்) கொண்டு வந்த இறைச் சான்றுகளை - அத்தாட்சிகளைக் கவனிக்குமாறு திருக்குர்ஆனில் உள்ள இந்த வசனங்கள் அழைக்கின்றன.
முந்திய தலைமுறைகளின் எண்ணங்களிலும் கொள்கையிலும் தவறான பொருளை மக்கள் மற்ற பிழைகளோடு சேர்த்து இணைத்து (குழப்பிக்) கொள்வார்கள் என்பதை இறைவன் அறிவான். அந்தப் பிழைகளைக் கண்டுபிடித்து (திருத்திக் கொள்ளும்) வகையறியாது இருப்பார்கள். திருக்குர்ஆன் அத்தகைய மக்களுக்கு, (பிழை திருத்திக் கொள்ளும்) அத்தாட்சியாக உள்ளது. இறைவன் கூறுகிறான் :
ஆனால் எவர் ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்கிறார்களோ, அவர்களுக்கு அவர்களுக்குரிய நற்கூலியை முழமையாக (அல்லாஹ்) கொடுப்பான். இன்னும் தன் அருளினால் அவர்களுக்கு அதிகமாகவும் வழங்குவான். எவர் அவனுக்கு வழிபடுதலைக் குறைவாக எண்ணு கர்வமும் கொள்கிறார்களோ, அவர்களை நோவினை செய்யும் வேதனைக் கொண்டு வேதனை செய்வான். அல்லாஹ்வைத் தவிர, (வேறு எவரையும்) அவர்கள் தம் உற்ற நேசனாகவோ, உதவி புரிபவனாகவோ (அங்கு) காணப்படமாட்டார்கள். மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு (உறுதியான) அத்தாட்சி வந்து விட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம். ஆகவே, யார் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவ(ன் அருளிய நோர் வழியி)னை பலமாகப் பிடித்துக் கொள்கிறார்களோ, அவர்களைத் தன் ரஹமத்திலும், அருளிலும் புகச் செய்கிறான். இன்னும் தன்னிடம் (அவர்கள் வந்து) சேரக்கூடிய நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான். (அல்குர்ஆன் 4:173-175)
இறுதித் தீர்ப்பு நாளில் இறைவனுக்கும் - இயேசுவுக்கும் நடக்கும் விவாதம் என்ற தலைப்பின் கீழ் - இயேசுவின் கடவுள் தன்மையையும் (மேரியின் கடவுள் தன்மையையும்) மறுக்கப்படுவது திருக்குர்ஆனில் எடுத்துக் கூறப்படுகிறது.
அந்த நாளில் இறைத்தூதர்களும் - அனைத்து இன மக்களும் இறைவன் முன்னர் கூடியிருக்கிறார்கள்.
இறைத்தூதர்களைப் பார்த்து மக்கள் அவர்களை எப்படி வரவேற்றார்கள் அவர்களிடம் மக்கள் என்ன கூறினார்கள் என்று இறைவன் கேட்பான். அவ்விதம் கேள்வி கேட்கப்படுகின்றத இறைத்தூதர்களில் ஒருவராக இயேசு இருப்பார்.
இன்னும், ''மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?'' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ''நீ மிகவும் தூய்மையானவன். எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய். உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார். ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ''என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்'' (என்றும்); (இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்'' (என்றும் கூறுவார்). அப்போது அல்லாஹ், ''இது உண்மை பேசபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும். (அல்குர்ஆன் 5:116-119)
இயேசுவின் இறைத்தூது
திரியேகத்துவம் - கடவுள் குமாரர் ஆகிய கருத்துக்களை குர்ஆன் மறுக்கும் எனில் இயேசுவின் உண்மையான தூது பற்றி அந்தத் திருமறை கூறுவது என்ன?
பல்வேறு சமூகங்களும் நாடுகளும் இறைவனின் போதனைகளில் இருந்து வழிமாறிச் செல்லும் போது இறைத்தூதர்களும் இறைச் செய்தியாளர்களும் இறைவனால் அனுப்பப்படுகின்றனர். அந்த இறைத்தூது எனும் சங்கிலித் தொடரிலே வந்தவர் தான் இயேசு.
மோஸேயும் மற்ற இறைச் செய்தியாளர்களும் தந்த போதனைகளிலிருந்து யூத இனம் வழிமாறிய போது அவர்களுக்காக சிறப்பான முறையில் தயாரிக்கப்பட்ட அனுப்பப்பட்ட இறைத்தூதர் தான் இயேசு.
இயேசுவின் பிறப்பிலே இறைவனின் அதி அற்புதம் இருந்தது. அவரது குழந்தைப் பருவம், சிறுவராய் இருந்த பருவம் - அளவற்ற அற்புதச் செயல் செய்த பருவம் ஆகியவற்றில் இறைவனின் துணை இருந்தது.
எனினும் பெரும்பாலான யூதர்கள் இயேசுவின் இறைத்தூததை மறுத்தனர். கீழ்க்காணும் குர்ஆன் திருமறையில் வசனங்கள் முன்னர் கூறிய வசனங்களில் தொடர்ச்சியாக இயேசுவின் இறைத்தூதை விளக்குகின்றனர். மேதினியை மகிழச்சி அலையில் தீர்க்கதரிசன வசனங்கள் இவை :
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.
3:49 இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான். இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்.) ''நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோதையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்ற நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவென். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது'' (என்று கூறினார்)
3:50 ''எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்குவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். என்னைப் பின் பற்றுங்கள்.''
3:51 ''நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவன். ஆகவே அவனையே வணங்குங்கள் இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.''
திருக்குர்ஆனின் இன்னொரு வசனம் மோஸேவுக்கு இறைவன் அருளிய தவ்ராத் எனும் வேதத்தை செல்லும்படியாவதே என இயேசு ஒப்புதல் அளிப்பது பற்றிக் கூறுகிறது.
இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசனம் பற்றியும் இந்த வசனம் எடுத்துரைக்கின்றது. அந்த வசனம் வருமாறு :
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ''இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்'' என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ''இது தெளிவான சூனியமாகும்'' என்று கூறினார்கள். (61:6)
பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் - புதிய ஏற்பாட்டிலும் இயேசு கூறுகின்ற எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் உள்ளன.
குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. அவரைத் தவிர வேறு எவரையும் குறிக்கவில்லை என்பது போன்ற வசனங்கள் பழைய ஏற்பாட்டில் இருப்பதை இங்கே காண்போம்.
இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) - நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான் (பைபிள்!)
உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நற்தொடர்பு உள்ள வர்கள் (அந்த வசனங்கள்) அந்த இறைத்தூதரைத் தவிர வேறு எவருக்கும் பொறுத்தமாக இருக்காது என்பதை எளிதாக உணர்வார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான் மோஸேயைப் போல் சாதாரணமாகப் பெற்றோருக்குப் பிறந்து திருமண முடித்து நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அமைத்து, மிகப் பெரிய அளவில் சடடங்களை நிறுவி இயற்கையான மரணத்தை அடைந்தவர். இயேசுவுக்கு இது பொருந்தாது! புதிய ஏற்பாட்டுப் புத்தகத்தைக் கவனமாகப் படித்தாலும் இயேசுவும் இது போன்ற ஒரு திருத்தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்வதைக் கவனிக்கலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன் - அவர் என்றென்றைக்கும் உங்களுடன் கூட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறு ஒரு தேற்றறவாளனை அவர் உங்களுக்கு தந்தருள்வார்!
பரிசுத்த ஆவி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் யோவான், குறிப்பாக விவரித்துள்ளதையும் கவனிப்போம்.
சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)
இந்த முன்னறிவிப்பின் விவரங்கள் பரிசுத்த ஆவி என்ற (அப்போதிருந்த பெயரைச் சுட்டிக் காட்டுவதல்ல) வரப் போகிறவரைப் பற்றிய குறிப்பே!
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
ஏனெனில் பரிசுத்த ஆவி என்பது இயேசுவின் காலத்திலும் அதற்கு முன்பும் இருந்தது என்பது பைபிளைப் படித்தால் புரியும். யோவான் பிறப்பதற்கு முன்னரே பரிசுத்த ஆவியால் நிரப்பபப்பட்டிருந்தார் என்றும் - இயேசுவும் (ஞானஸ்நானத்தின் போது) புறா உருவத்தில் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார் என்பதையும் பைபிளில் படிக்கிறேர். ஆனால் தேற்றறரவாளர் என்பவருக்கு உரிய குணக்கூறுகள் என்பதை தீர்க்கதரிசனங்களில் இருந்து நாம் காணலாம்.
1. அவர் (தேற்றவாளர்) இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போகாமல் (அவர்) வாரார்!
2. அவர் நம்பிக்கையாளர்களிடம் நிரந்தரமாகக் குடியிருப்பார்.
3. இயேசுவை அவர் பெருமைப்படுத்துவார்
4. இறைவனிடமிருந்து கேட்ட செய்திகளையே அவர் பேசுவார்.
இந்த குணமேன்மைகள் இறைத்தூதர் முஹம்;மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதை கீழ்க்காணும் சிறு குறிப்புகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
1. இயேசுவுக்குப் பின்னால் வந்த ஒரே இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தான். இயேசுவுக்கு 6 நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அவர் வருகின்றார். இயேசுவின் இறைப்பணி இஸ்ரவேல் சந்ததிகளின் காணாமல் போன ஆடு என்ற எல்லையோடு நின்று விடுகின்றது. ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தி உலகளாவியது.
2. இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் செய்தியைத் தான் இறைவன் உலக முழுமைக்குமான செய்தி - நிரந்தரமான செய்தி எனக் கூறுகிறான்.
3. முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் போல் இயேசுவைப் பெருமைப்படுத்திப் பேசியவர்கள் எவருமில்லை. யூதர்களோ அவரை ஒரு கள்ளத் தீர்க்கதரிசி என்று அழைத்தார்கள். அவருடைய அன்னையை (மேரியை) ஒழுக்கங்கெட்டவர்கள் எனக் கூறினார்கள். இயேசுவை அவர்கள் சிலுவையில் அறைய முயன்றார்கள். முஹம்மது நபி யோ இயேசுவை மிகப் பெரிய இறைத்தூதர் என்று கருதினார்கள். இறைவனின் வார்த்தை இயேசு - என்றும் கூறினர். பைபிளில் சொல்லப்படாத இயேசுவின் அதிஅற்புதங்கள் பற்றிக் குர்ஆன் கூறுகிறது. மேரியே மிகச் சிறந்த கற்புள்ள பெண்மணி, சொர்க்கத்தில் இருக்கப் போகும் பெண்களில் சிறந்தவர் என்றும் கூறப்பட்டது. இவ்விதம் இயேசுவை மிக மிகப் பெருமைப்படுத்தியவர் முஹம்மது நபி (ஸல்) அவர்களே!
4. நான்காவதாக (தேற்றவாளர் பற்றிய) குண மேன்மைகள் இறைத்தூதர் முஹம்மது நபிக்கே மிகச் சுத்தமாகப் பொருந்தும்.
திருமறைக் குர்ஆன் வானவர் தலைவர் கேப்ரியல்(ஜிப்ரயீல்) அவர்களால் முஹம்மது நபிக்கு அருளப்பட்டது. அவரிடமிருந்து கேட்ட இறைவசனங்கள் வார்த்தை தவறாமல் - சேர்த்தல் ஏதுமில்லாமல் திரிபு இல்லாமல் - மறக்காமல் தனது தோழர்களுக்கு முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அவர் (நபி) தனது விருப்பப்படி எதுவும் கூறுவதில்லை. இது அவருக்கு வஹி மூலம் அறிவிக்கப்பட்டதேயன்றி வேறல்ல! (குர்ஆன் 53:4-5)
சுயமாகத் தானே அவர் பேசமாட்டார் என்ற பைபிளின் வசனத்தை கூர்மையாகப் பார்த்தால் - தேற்றவாளர் என்ற பாத்திரத்தின் குண மேன்மைகள் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குண மேன்மைகளோடு மிகச் சரியாக ஒத்துப் போவதைக் காணலாம்.
இந்தத் தீர்க்கதரிசனங்களோடு - மற்ற பிற தீர்க்க தரிசனங்களையும் வைத்துப் பார்த்தால் மறுக்க முடியாத ஒப்புவமை நபி (ஸல்) அவர்களுக்கே பொருந்தும்.
இதைப் பைபிள் - குர்ஆன் - மற்றும் மத ஒப்புநோக்கு பற்றிய நவீன கால ஆய்வுரைகளை வைத்து யூதர்களும் கிறிஸ்தவர்களும் நபி (ஸல்) அவர்களை மறுப்பதில்லை.
ஆனால் தவறான கருத்தடிப்படையிலும் விவரமறியாத வெறுப்புடனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை நிராகரிக்கின்றார்கள்.
இயேசுவின் வின்னேற்றம்
இயேசு நாதர் காட்டிய நேர்வழியில் மக்கள் நடக்காமல் இருப்பது தான் வரலாற்றின் சோகமான உண்மை. இறையருளால் சில சீடர்கள் தான் அவரை ஆதரித்து அவரது வழியில் நடந்தனர். இதைவிடவும் நம்பிக்கையற்ற சிலர் 600 ஆண்டுகளுக்குப் பின்னர் இறைத்தூதர் முஹம்மது நபியைக் கொல்ல முயற்சி செய்தது போலவே இயேசுவையும் கொல்ல முயற்சி செய்தனர்.
ஆனால் இறைவன் அந்த சதிகாரர்களின் செயல் அறிந்து அதை விட உயர்ந்த திட்டம் வைத்திருந்தான். இயேசுவுக்காகவும் அவரது சீடர்களுக்காகவும் இதைப் பற்றி திருக்குர்ஆன் கீழ்க்காணும் வசனங்களை விளக்குகிறது.
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது; ''அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?'' என்று அவர் கேட்டார். (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாதிய்யூன். ''நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம். திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்'' எனக் கூறினர். ''எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம். எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!'' (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.) (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான். ''ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன். இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன். மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன். பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்'' என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன். அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் : 3:53-56)
மேற்கூறிய வசனங்கள் குறித்துக் காட்டுவது போல் இயேசு தனது மரணத்திற்கு முன்பே வானத்தில் உயர்த்தப்பட்டார். இதன் பொருள் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை! இதைத் திருக்குர்ஆன் எடுத்தோதுகிறது. இயேசுவின் எதிரிகள் அவரை சிலுவையில் கொல்லப் பார்த்தனர். ஆனால் இறைவன் இயேசுவைக் காப்பாற்றினார். யாரோ ஒருவர் தான் சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையும் இந்த சதியும் மர்யம் (மேரியை) பற்றிய அவதூறும் நம்பிக்கையற்ற யூதர்களால் செய்யப்பட்டது என்று திருக்குர்ஆனின் கருத்து. இது பற்றிய திருக்குர்ஆனின் வசனம் வருமாறு :
இன்னும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும், மர்யமின் மீது மாசெரும் அவதூறு கூறியதின் காரணமாகவும் (அவர்கள் சபிப்பட்டனர்). இன்னும், ''நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்'' என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்); அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான். மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது; நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். (4:156-159)
அப்படியானால் இயேசுவுக்குப் பதிலாக அறையப்பட்ட மனிதன் யார்? இதைப்பற்றி திருக்குர்ஆன் விளக்கவில்லை. இந்தக் கேள்விக்குரிய பதிலையும் கூறவில்லை!
திருக்குர்ஆனுக்குத் தெளிவுரை எழுதியவர்கள் சில பெயர்களைக் குறித்து காட்டியுள்ளனர். திருக்குர்ஆனோ நபிகள் நாயகத்தின் அறிவுரை - விளக்கவுரைகளோ இவர்களுடைய யூகங்களுக்கு ஆதரவாக இல்லை.
இதன் பொருள் நீதித் தீர்ப்ப நாளுக்கு முன்னர் இயேசு மீண்டும் பூவுலகிற்கு வருவார் என்பதையே காட்டுகிறது. எனினும், திருக்குர்ஆன், விரிவுரையாளர்கள் மேற்சொன்ன வசனத்தின் கடைசிச் சொற்றொடர்களை வைத்து விளக்கம் தந்துள்ளனர்.
இயேசு மீண்டும் வருவார். அப்போது கிறிஸ்துவர்களும், யூதர்களும் இயேசு இறப்பதற்கு முன் அவரை நம்புவார்கள் என்று தெளிவுரையாளர்கள் கூறுவதற்கு நபிகள் நாயகத்தின் அருள்வாக்குகள் ஆதாரம் தருகின்றன.
கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்துக்கள்
இந்தக் கருத்துக்களைப் படித்தவுடனேயே கிறிஸ்துவாகள் கூறக் கூடும், பாருங்கள், இது தான் முஸ்லிம்கள். இயேசுவைப் பற்றி இவர்கள் இப்படிக் கூறுவதால் தான் இவர்கள் மறுப்பாளர்களாகவும் நம்பிக்கையற்றவர்களாகவும் இருக்கின்றனர்! என்பர்.
இவர்கள் இப்படிக் கூறினாலும் திருக்குர்ஆனின் கருத்துக்கள் கூர்மையான ஆராய்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. யார் உள்ளபடியே இறை நம்பிக்கையையும் கிறிஸ்துவ மார்க்கத்தின் மீது ஆர்வம் கொண்டிருக்கின்றார்ளோ அவர்கள் கீழக்காணும் காரணங்களை ஆராய வேண்டியவர்களாக இருக்கின்றார்கள்.
1. திருக்குர்ஆன் என்பது இறைவன் இறுதியாக அருளிச் செய்த வேதம்.அந்த வேதத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் முழுமையான உண்மை. இதை நம்பாதவர்களுக்கு இந்தக் கருத்துக்கள் பெரிதாகத் தென்படாது. ஆனால் திருக்குர்ஆன் பற்றிய வரிக்கு வரியான திறனாய்வும், விஞ்ஞான அடிப்படையிலான ஆராய்ச்சியும் அந்த வேதத்தினலுள்ளது அனைத்தும் உண்மைதான்.
என்று சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குர்ஆன் என்பது முஹம்மத் நபி (ஸல்) அவர் கூறப்பட்டது என்று சிலர் கூறுவர். கிறிஸ்தவ யூத வேதங்களைக் காப்பி அடித்தது என்றும் கூறுவர். அவர்களுக்கு உலக வரலாறும் தெரியாது. குர்ஆனும் புரியாது. நபிகள் நாயகம் பற்றியும் அறிந்திருக்கவில்லை.
முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மறைவுக்க இரண்டு நூற்றாண்டுகள் கழித்துத் தான் அரபி மொழியில் பைபிள் மொழி பெயர்க்கப்பட்டது.
அது தவிர நபிநாதர் எழுதப்படிக்கத் தெரியாதவர் என்பதையும், அவர் வாழ்ந்த கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மத வேதங்கள் என்பன தேவாலயங்கள் சர்ச்சுகள் தவிர வெளியுலகில் புழக்கத்தில் இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துக் கொண்டால்.. மேற்சொன்ன குற்றச்சாட்டிலுள்ள அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
2. இறைவனின் செய்தியிலுள்ள ஓரிறைத் தன்மையையும் உலகளாவிய வாக்கையும் புரிந்து கொண்டால் இறைத்தூதர்களை மக்கள் ஒப்புக் கொண்டாக வேண்டும். இறைத்தூதரில் ஒருவரை நிராகரித்தாலும் அது அனைத்து இறைத்தூதர்களையும் நிராகரிப்பதற்குச் சமம். யூதர்கள் இயேசுவின் இறைத்தூதையும் நபிகள் நாயகம் அவர்களின் இறைத்தூதையும் நிராகரிக்கிறார்கள். கிறிஸ்துவர்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின் இறைத்தூதை நிராகரிக்கிறார்கள். முஸ்லிம்களோ அனைத்து இறைத்தூதையும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அதிலுள்ள தவறான சரித்திரத் திரிபுகளையும் - மனிதன் நுழைத்த கருத்துக்களையும் நிராகரிக்கிறார்கள்.
3. திருக்குர்ஆன் கூறுவது காரணமாகவே முஸ்லிம்கள் தங்களது நபிநாதரை நேசிப்பது போலவே இயேசுவையும் நேசிக்கிறார்கள். மேலும் கிறிஸ்துவர்களின் புதிய ஏற்பாட்டில் கூறப்படாத இயேசுவின் அற்புதங்கள் திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றன. எடுத்துக்காட்டாக இயேசு தொட்டிலிலிருந்து பேசுகிறார். மக்கள் எதை உண்கிறார்கள், எதைத் தங்களது களஞ்சியத்தில் வைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார் (திருக்குர்ஆன் வசனங்களின்படி)
4. இயேசு ஒரு தெய்வம் என்ற கருத்து புனிதபால் மற்றும் அவரது சீடர்களால் கிறிஸ்து மார்க்கத்தில் நுழைக்கப்பட்டது. இதை எதிர்த்த பல லட்சக்கணக்கான கிறிஸ்துவர்களின் சவங்களின் மீது இந்தக் கருத்து நிலைநாட்டப்பட்டது. இதைப் பற்றி காஸ்டிலோ என்பவர், ஒரு மனிதனை நெருப்பில் எரிப்பது ஒரு கொள்கையை நிலைநாட்டியது ஆகாது என்றார்.
5. சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன் என்பவரின், தலைமையில் நடந்த கிறிஸ்துவ மாநாட்டில் தான் தற்போதுள்ள கிறிஸ்துவர்களின் நான்கு புதிய ஏற்பாடுகள் அங்கீகாரம் பெற்றன. இதுவும் அந்தப் பேரரசரின் அரசியில் லாபங்களுக்காகச் செய்யப்பட்டன.
ஏராளமான பைபிள் புத்தகங்களும் ஏற்பாடுகளும் மதக் கிரந்தங்களும் தள்ளுபடி ஆகமம், என்ற பெயர் இடப்பட்டன. இதில் பல புத்தகங்கள் இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டவையாகும். இவற்றில் பர்னபாஸ் ஆகமம் - ஹெர்மாசின் மேய்ப்பன் போன்ற பைபிள் புத்தகங்கள் திருக்குர்ஆனோடு ஒத்துப் போகின்றன.
6. இயேசுவின் ஓரிறைக் கொள்கையும், மனிதக் கருணைக் கொள்கையும் முஸ்லிம்களால் மட்டும் ஒப்புக் கொள்ளப்படவில்லை. யூதர்களாலும், பழைய காலத்துக் கிறிஸ்தவர்களான எபியோனியர்கள் - செரிந்தியர்கள், பாசிலிடியன்கள், காபோகிரேடியன்கள், ஹைபிஸ்சிஸ்டிரியன்கள் போன்றவர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட்டன.
அரியன்கள், பாசிலியன்கள், கோத்துகள் போன்றவர்களாலும் இறைத்தூதர் தான் இயேசு என்பதை ஒப்புக் கொண்டார்கள். ஆனால் இப்போதும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமுள்ள ஓரிறை சர்ச்சுகளும், ஜெஹோவா காட்சியாளர்களும் இயேசுவைக் கடவுள் என வணங்குவதில்லை.
7. கூர்மையான பைபிள் ஆராய்ச்சி - இயேசுவும், அவரது சரிதம் எழுதியவர்களும் சொல்லாத கருத்துக்களைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறது.
இது பற்றி ஹெய்னிஸ் ஜாஹ்ர்ன்ட் என்பவர், இயேசு பேசாத சொற்களை அவரது வாயிதழில் வைத்தனர். அவர் நடத்தாத அற்புதங்களை அவர் நடத்தியதாகக் கூறினர் என்றார். இது போலவே பல முடிவுகளை தேவாலய ஆயர்கள் அறிந்திருந்த போதிலும் அவற்றை ரகசியமாக வைத்திருந்தனர். ஆராய்ச்சி நிபுணர்களுக்கு மட்டும் அறிவித்தனர். சர்ச்சுகள் இயேசுவைப் பற்றிக் கூறுவதற்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று மனித குமாரன் இயேசு என்ற நூலில் ரூடால்ஃப் அகஸ்டீன் எழுதியுள்ளார். (ஜெர்மனிய மொழியில் இந்தப் புத்தகம் 1972 ல் வந்தது. 1977 ல் மொழி பெயர்க்கப்பட்டது).
8. இயேசுவின் இயற்கைக் குணம் - இறைத்தூது - சிலுவை மரணம் - விண்ணேற்றம் இவை பற்றிய தவறான எண்ணங்களில் இருப்பது தான் கிறிஸ்துவ மார்க்கத்தில் இன்றுள்ள பிரச்சினை. இதைப் பலரும் அறை கூவி ஆராய்ச்சி செய்துள்ளனர்.
இங்கிலாந்திலுள்ள பல அறிஞர்கள் எழுதி ஜான் ஹிக் என்பவரால் ஒழுங்கு செய்யப்பட்டு, கடவுள் அவதாரப் புராணம் என்ற நூல் 1977 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் அந்த அறிஞர்கள் இயேசு என்ற மனிதர் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டவர், தெய்வீக நோக்கத்துக்காக அவர் செயல்பட்டார். பிற்காலத்தில் அவரே கடவுள் அவதாரம் என்று கூறப்பட்டது. இது புராண பாணியில் கவிதையின் உயர்வு நவிற்சி முறையில் அவரது முக்கியத்துவத்தை உயர்த்துவதற்காக நமக்குக் கூறப்பட்டது தான் என்று சொல்லியுள்ளார்கள்.
ஆனால் ஜார்ஜ் கேரிப் என்பவர் இந்தப் புத்தகத்திற்கு மறுப்பு தெரிவிக்கும் போது இயேசுவைக் கடவுள் அவதாரம் என்று ஒப்புக் கொள்ளவில்லை எனில் இயேசுவின் இறைத்தூதை முழுமையாக உணர முடியாது. மக்களை வழிநடத்தும் ஆளுமையை விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.
ஆனால் உறுதியாக இது பலவீனமான வாதம் ஆகும். ஆப்ரஹாம், மோசஸ், முஹம்மத் நபி (ஸல்) போன்ற மிகப் பெரிய தூதர்கள் தங்களது மக்களின் மீது அளப்பரிய வழி நடத்தும் ஆளுமையை பெற்றிருக்கிறார்கள். இவர்களில் யாரும் தன்னைக் கடவுள் என்றோ - கடவுளின் குமாரர் என்றோ கூறிக் கொள்ளவில்லை.
9. பிதா மகன் பரிசுத்த ஆவி என்ற திரியேகத்தத்துக் கொள்கை இன்றிருக்கும் பைபிளில் கூடக் காண முடியாது. நமது இறைவனான கர்த்தர் ஒரே ஒருவர் தான் (மத்தேயு) என்று இருக்கிறது. திரியேகத்துவத்தை மறுக்கிறது. சுவிசேஷக்காரர்கள் பலரும் இது போல் எழுதியுள்ளனர்.
10. தான் ஒரு தெய்வம் என்று இயேசு கூறியதாக இப்போது இருக்கிற பைபிளில் கூடக் கூற முடியாது. கடவுளின் குமாரன் நான் என்ற சொல் இயேசுவின் வாயிலிருந்து வந்ததாகவும் பைபளில் கூற முடியாது.
பைபிள் அகராதி என்ற நூல் ஹேஸ்டிங்கினர் கூறுகிறார். தன்னைக் கடவுள் என்று இயேசு கூறினாரா என்பது சந்தேகத்திற்குரியது. எனது பைபிள் ஆராய்ச்சியில் கடவுளின் குமாரன் என்ற சொற்களை யோவான் சுவிசேஷத்தில் 5-7 ஆகிய அத்தியாயங்களில் காண முடிகிறது. பிறர் தான் அந்தச் சொற்களை சில இடங்களில் கூறுகிறார்கள். கடவுளின் குமாரன் என்று இயேசுவே கூறியிருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் கீழ்க்கண்ட கருத்துக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
Þ அந்தக் குமாரன் எனும் சொல் ஹெலெனிஸ்டிக் என்ற மொழி வகையைச் சார்ந்தது. இயேசுவும் அவரது சீடர்களும் புழங்கிய மொழி வகை அது. செமிடிக் மொழியில் நிச்சயமாக அந்தப் பொருள் வராது.
Þ கிரேக்க மொழியிலுள்ள பைபிள் குமாரன் என்ற சொல்லுக்கு பியாஸ் - பியாடா எனும் சொற்கள் காணப்படுகின்றன. கிரேக்க மொழியில் இதற்கு ஊழியன் - ஊழிய மகன் என்பதே! இது வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்படும் போது இயேசுவுக்கு மகன் என்ற சொல்லையும் மற்றவர்களுக்கு ஊழியர் என்ற சொல்லையும் பயன்படுத்தினர்.
Þ மனித குமாரன் என்று இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்ட சொல் சுவிசேஷங்களில் 81 முறை வருகிறது. இது இயேசு தன்னுடைய மனித நிலைமையைக் குறித்து அறிவார்ந்த முறையில் கூறியதாகும். இந்த இலக்கியப் பூர்வமான சொல் இயேசுவின் மனிதப் பாத்திரத்தைப் புற்றிய அழுத்தமான வெளிப்பாடாகும். இப்போது வாழும் கிறிஸ்தவர்கள் இதை ஒப்புக் கொள்வார்களா?
பைபிள் வசனம் - போப் மறுப்பு
யூதத் தலைமைப் பூசாரியாலும், யூத மூப்பர்களாலும் திட்டமிடப்பட்டு – உத்தரவிடப்பட்டது தான் இயேசு கைது செய்யப்பட்டார். சிலுவையில் அறையப்பட்டார் என்பது பரம்பரையான பைபிள் கூறும் கதை.
1960 ஆம் ஆண்டுகளில் இந்தக் கதை கிறிஸ்துவர்களின் மிக உயரிய அதிபதியான போப்பாண்டவரால் மறுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பில்லை எனக் கூறினார். இக் கூற்று பைபிள் கதையையே மறுப்பதாகும்.
இது (இஸ்ரேல் நாட்டுக்காகச் செய்யப்பட்ட) அரசியல் ரீதியான அறிவிப்பு என நீங்கள் கூறலாம். ஆனால் முஸ்லிம்கள் தொடர்ந்து கூறி வருகின்ற ஒரு உண்மையை இந்த அறிவிப்பு நிலைநாட்டுகிறது.
கிறிஸ்துவ மார்க்கத்திற்குள் தேவாலய நிர்வாகங்கள் பல செய்திகளைப் புகுத்திக் கொண்டிருந்தன. இதனால் பல நம்பிக்கைகள் மாறியது மட்டுமல்லாமல் - கிறிஸ்தவ மார்க்கத்தின் பழைய உருவத்தையே மாற்றி முரண்படுகிறது.
கடவுள், பைபிள், இறைவனுடன் மனிதனின் உறவு நிலை பற்றிய தேவாலயங்கள் மதக்கருத்துக்கள் மக்களை துரதிர்ஷ்டவசமான முடிவுகளை எடுக்கக் கட்டாயப்படுத்தியது.
இதனால் ஒருவர் விஞ்ஞானியாக - படிப்பாளியாக இருந்து கொண்டு கிறிஸ்துவராகவும் இருக்க முடியாது என்ற நிலையைத் தோற்றுவித்தது.
மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்க்க முடியாது என்ற கருத்தை தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் பெரும்பாலான மக்களிடையே தோற்றுவித்தது.
இதன் தாக்கம் பிற மதங்களின் மீதும் ஏற்பட்டது. இயேசுவின் போதனைகளைச் சீர்குலைக்காமலும் - திரிபு செய்யாமலும் இருந்திருந்தால் இது நடந்திருக்காது.
இதனால் தான் இஸ்லாம் இதைப்பற்றிக் கூறும் போது மதத்திற்கும் விஞ்ஞானத்திற்கம் முரண்பாடு இல்லை எனக் கூறுகிறது.
விஞ்ஞான உண்மைகள் - இறைவனைப் பற்றிய ஞானத்தை அறிய ஒரு வழி தான். வெளிப்பாடுகள் என்ற முன்னுரைப்புகள் இயேசுவின் போதனைகளிலும் குர்ஆனிலும் உள்ளன. உண்மையான விஞ்ஞான அறிவும் மதமும் - கடவுள் எனும் மூல ஊற்றிலிருந்தே வருகின்றன. ஏனெனில் கடவுள் தனக்கு முரணானதைக் கூற மாட்டார்.
கிறிஸ்துவச் சரித்திரத்திலுள்ள திரிபுகளான - திரியேகத்துவம் கடவுளின் குமாரன், ஜென்மப் பாவம், பாவமன்னிப்பு என்பவை மக்களை மத்த்திலிருந்து விரட்டியுள்ளன. ஆனால் இஸ்லாம் மார்கத்திற்கு இது போன்ற பிரச்சினைகள் இல்லை. இருப்பினும் இஸ்லாமையும் ஒரு மதம் என்றே மேற்கத்திய பாணியில் ஒரு குறிப்பிட்ட வளையத்தில் - பொருளில் நிலை நிறுத்தியுள்ளதால் கிறிஸ்துவ மதம் போலவே இஸ்லாத்தையும் எண்ணிக் கொண்டனர். ஆனால் ஒரு சிலர் தான் இந்த யூகத்திலுள்ள பொய்யைக் கண்டுபிடிக்கும் ஆற்றல் பெற்றுள்ளனர்.
குர்ஆனின் வசனங்களுக்கு ஆதாரம்
இயேசுவைப் பற்றிய குர்ஆனின் கண்ணோட்டத்தைத் தயக்கத்தோடும் விருப்பமில்லாமலும் பலர் பார்ப்பதற்கு மேற்கூறிய யூகங்கள் காரணமாகின்றன. ஆனால்சரித்தித உண்மைகளும் சில இருக்கவே செய்கின்றன.
Þ இயேசுவின் மறைவுக்குப் பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவம் என்பது யூத மார்கக்த்தின் ஒரு பகுதி என்றே நினைத்து வந்தனர்.
Þ கிறிஸ்துவ சரித்திரம் முழுவதும் கிறிஸ்துவர்கள் மற்றும் யூதக் கல்வியாளர்களின் பண்பாடு ஒரே மாதிரியாகவே இருந்தது.
Þ பைபிள் ஆராய்ச்சிகளும் விஞ்ஞான ஆய்வுகளும் பைபிளோடு ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
Þ கிறிஸ்துவர்களில் சிலர் ஒரு தெய்வத்தை ஒப்புக் கொண்டனர். இயேசுவைக் கடவுளாகவோ - கடவுளின் குமாரராகவோ ஒப்புக் கொள்ளவில்லை.
இன்றைக்கு ஆய்வாளர்களும், பிறரும் கண்டுபிடித்துள்ள இயேசுவின் நிலையைப் பற்றி ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் குர்ஆன் கூறியது. அதிலிருந்து எந்த மாற்றத்தையும் குர்ஆன் செய்து கொள்ளவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தை மக்களிடமிருந்து மறைத்தல்
குர்ஆன் கூறியவற்றை மக்களிடமிருந்து மறைத்து - அதை நிராகரிக்கம் போக்குக்குக் காரணங்கள் சில உண்டு.
1. நீண்ட நெடிய காலததிற்கான வெறுப்பு இஸ்லாம் மீது ஏற்பட்டது (ஜெருஸலம் நகர் யாருக்குச் சொந்தம் என்பதற்காக முஸ்லிம்கள் கிறிஸ்துவர்களுக்குள்ளே நடந்த) சிலுவை யுத்தம். அடுத்தது அரபு - இஸ்ரேல் மோதல்.
2. சிலர் கிறிஸ்துவத்தை ஒப்புக் கொள்வதில்லை. அதே நேரத்தில் உண்மை எது என்பதும் புரிவதில்லை.
3. மிகப் பலர் இஸ்லாமை ஒப்புக் கொண்டால் பிறர் கேலி பேசுவார்களே, சுற்றத்தாரிடமிருந்து பிரிந்து போய் விடுவோமே - கிறிஸ்துவ மார்க்கத்தை வெளிப்படையாக கைவிட்டு இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றால் மோதல் ஏற்படுமே என்று தான் நினைக்கின்றனர்.
4. கல்வித் துறையில் குறிப்பாகக் கீழ்த்திசை ஆராய்ச்சியாளர்கள் இஸ்லாம் மற்றும் குர்ஆன் பற்றி எழுதினால் யாரும் அதைத் திறனாய்வு செய்வதில்லை. அதிலிருந்து மேற்கோள் காட்டுவதில்லை. அதை ஒரு அறிவார்ந்த பணி என்று கூட ஒப்புக் கொள்வதில்லை.
இதை விடப் பெரிய துயரம் - இதனால் சிலர் பதவியையும் இழந்து விடுகின்றனர். 1978 ஜனவரி 3 ஆம் நாளைய வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கைச் செய்திப்படி ரிச்மாண்ட் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் டாக்டர் ராபர்ட் அலெய் தனது மத ஆராய்ச்சித் துறை பதவியை இழந்தார்.
இயேச ஒரு போதும் தன்னை கடவுளின் குமாரர் எனக் கூறவில்லை என்ற கருத்தை ஆதரித்தார் அவர் என்பதே காரணம்.
பழம்பெரும் பைபிள்களை ஆராய்ந்து டாக்டர் அலெய் எழுதினார்.
இயேசு தன்னைக் கடவுளின் குமாரர் எனப் பெசிய வ சனங்கள் பிற்காலத்தில் பைபிளில் சேர்க்கப்பட்டவையே. தேவாலயங்கள் கூறுவது போல் அவர் பேசவில்லை. இயேசுவின் முழு வாழ்வு முறையைப் பார்த்தாலும் இத்தகைய தெய்வத்தன்மை இருந்ததாகக் கொள்ள முடியாது. இயேசு இறந்த பின்னர் மூன்று தலைமுறைகளுக்கு கிறிஸ்துவத் தேவாலயம் - யூதத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இயேசுவுக்கு தெய்வத்தன்மை இருந்தது எனக் கூறுவது அவர்களின் இறைநம்பிக்கைக்கு அப்பாற்பட்டதாகும்.
இயற்கை அமைப்பு
இதைத் தவிர இன்னும் ஏராளமான பேர் இயேசு பற்றிய உண்மையை உணர்ந்தவர்களாக இருக்கின்றனர். இதனால் இஸ்லாம் என்பது வேகமாக வளர்கிற மார்க்கமாக உலகில் இருக்கிறது. மிகுந்த விசுவாசம் கொண்ட கிறிஸ்துவர்களாய் உள்ளவர்கள் கூட கீழ்க்காணும் உண்மைகளை உணர்ந்தவர்களாக உள்ளனர்.
1. இயேசுவை இஸ்லாம் நிரகரிக்கவில்லை. மனித குலத்திற்கு இறைச் செய்தியைக் கூறிய மாமனிதர்களின் வரிசையில் அவரை வைக்கிறது. இறைவன் நபித்தும், இறைச்செய்தி ஆகியவற்றில் புதிய எழுச்சியை இஸ்லாம் தோற்றுவிக்கிறது.
2. கிறிஸ்துவம், யூத மதம் அல்லது வேறு எந்த மதமானலும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தோடு பார்க்குமானால் ஓரிறைவனையும் அவன் மனித குலத்திற்கு இட்டிருக்கும் கட்டளைகளை உணர்ந்தவர்களாகவும் மிக மிகப் பொருத்தம் உடையவர்களாகவும் இருப்பார்கள். சில பிரச்சினைகளில் ஏன் பைபிள் குளறுபடிகளுடனும் குறைவிடுதல்களோடும் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வார்கள்.
3. இறைச் செய்தி வெளிப்பாட்டின் மிகப் பெரிய சங்கிலித் தொடரின் கடைசித் தொடராகத் தான் இருப்பதாக இஸ்லாம் கருதுகிறது. தனக்கு முன்னுள்ள நம்பிக்கையாளர்கள் இஸ்லாம் மீதும் நம்பிக்கை கொள்வார்களானால் மிகப் பெரிய இறை அருள் கிடைக்கும் என்று இஸ்லர் வாக்குறுதி தருகிறது. யார் தனது மதத்தில் நம்பிக்கை கொள்வதோடு என்னையும் நம்பி - எனக்கு இறைச் செய்தி அளிக்கப்பட்டதாக நம்பிக்கை கொள்கிறாரோ அவருக்கு இரு பரிசு இறைவனால் அருளப்படும் எனக் கூறியுள்ளார் நபி. ஒரு பரிசு தனது மதத்தை நம்புவதற்கு! இன்னொன்று உண்மையை அங்கீகரிப்பதற்கும் - இஸ்லாத்தை நம்புவதற்கும்!
இறுதியாக இயேசுவை இறைவனின் மிகப் பெரிய தூதுவர்களில் ஒருவராகக இஸ்லாம் கருதுகிறது. இயேசுவின் செய்தியே ஓரிறைவன் பற்றிப் போதிப்பதும் - அந்த இறைவனிடம் மனித குலத்தை அழைத்துச் செல்வதுமாகும்!
இயேசு தன்னை இறைவனின் அடியார் - நற்செய்தி கொண்டு வந்த தூதுவர் என்பதைத் தவிர வேறு எதுவும் கூறவில்லை. அவரது வாழ்வு - இறைச் செய்தி பற்றி குர்ஆன் ஏராளமான ஆதாரங்களுடன் பேசுகிறது. இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றி முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள், காத்திருக்கிறார்கள்.
இயேசு இரண்டாம் வருகை தரும் போது கிறிஸ்துவர் அல்லாதவர்கள் மீது தீர்ப்புத் தருகிற கடவுளாக வருவதில்லை. இறைத்தூதுவர் இயேசு என்ற அளவில் தான் வருவார்.
தவறாக கருத்துக்களைத் திருத்தவே இயேசு வருவார்!
தன்னைப் பற்றியும் தனது இறைத்தூது பற்றியும் ஏற்கனவே தவறான கருத்துக்களை கொண்டிருந்தவர்களைத் திருத்தவே அவர் வருவார்.
நபிநாதர் வாக்குப்படி இரண்டாம் வருகை தருகின்ற இயேசு நாற்பதாண்டுகள் இவ்வுலகில் தங்குவார். அப்போது உலக வாழ்வே அனைவருக்கும் மகிழ்ச்சியுள்ளதாய் இருக்கும். அப்போது உலகிலுள்ள ஒவ்வொருவரும் அவரை இறைத்தூதுவர் என்றே நம்புவார்கள் - கடவுளின் குமாரர் அவர் என்று நம்ப மாட்டார்கள்.
இயேசு இரண்டாம் வருகை நிகழ்கிற போது உயிருடன் இல்லாதிருந்தால் அவரைப் பற்றித் தவறான கருத்துக் கொண்டிருந்தோர் என்ன செய்வது?
இப்போதே - இன்றே - சரியான கருத்தை.. .. சத்தியத்தை நம்பிப் பின்பற்ற வேண்டியது தான்!
சத்தியத்தில் விழித்துக் கொண்ட இதயம்!
(இக்கடிதம் பற்றி குறிப்பு இறுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது)
அன்புள்ள ஐயா,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
தாங்கள் தொலைக்காட்சியில் விவாதித்த விவரம் குறித்து மதக் கல்வி மாணவியாக இருந்போதும் அதற்குப் பிறகு உலகத்தின் பல பாகங்களிலும் நான் விவாதித்திருக்கிறேன்.
ஆங்கில நாட்டைச் சேர்ந்த புதிய முஸ்லிம் பெண்ணாகிய நான் இப்போது சௌதி அரேபியாவில் உள்ளேன். உங்களது விவாதம் கூர்மையான வேறுபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சில விஷயங்களில் சிந்தனையையும் தூண்டுவதாகவும் அமைந்திருக்கிறது.
இயேசுவைப் பற்றியும் மேரியைப் பற்றியும் குர்ஆனில் கூறப்பட்டிருப்பதும் புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருப்பதும் எதிர் எதிராக கண்ணோட்டங்களாகும்.
கிறிஸ்துவ நம்பிக்கை இயேசு என்பவர் கடவுளின் குமாரர் என்பதாகும். குர்ஆன் இதை நிராகரிக்கிறது. இயேசு தன்னைப் பற்றி கடவுளின் குமாரர் எனக் கூறாத போது ஏன் கிறிஸ்தவர்கள் இப்படிக் கூறுகிறார்கள்? என்று கேள்வி கேட்க வேண்டியது அவசியமாகிறது.
இஸ்லாம் கிறிஸ்துவம் ஆகியவற்றின் அடிப்படைகளை ஆராய்ந்தால் இதற்குரிய பதில் வெளியாகும். முஸ்லிம்களாகிய நாம் இறைவன் ஒருவன் மீது தான் நம்பிக்கை கொண்டுள்ளோம். வசனங்களைக் கொண்டே குர்ஆன் மீதும் விசுவாசம் கொண்டுள்ளோம்.
அது போலவே இறைவனின் தூதவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் உண்மையான தூதுவர் - இறைவனின் அடியார். இறைவனுக்கு உண்மையானவர் - கீழ்படிதலுள்ளவர் நீடித்த - முழுக்க முழுக்க, ஒரு மனிதர் - இறைவனின் நல்வழியில் அவனிடம் மக்களை அழைத்துச் செல்லும் இறைக்காரணத்திற்கு ஒரு கருவியாக இருந்தவர் - என்று நம்புகிறோம்.
இப்போது கிறிஸ்து மார்க்கத்தைப் பார்போம். அந்த மார்க்கம் இறைவனை அடிப்படையாக வைத்து எழுப்பப்படவில்லை. வேதப்புத்தகம் என்பது கூட இயேசு இறந்த பின்னர் 150 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டதாகும்.
கிறிஸ்து மார்க்கம் என்பது இயேசுவின் பாத்திரத்தை வைத்தே தொடங்கப்படுகிறது. இயேசு அதிசய அற்புதங்களைச் செயதவர் - இறந்தவரைப் பிழைக்கச் செய்தவர் - குஷ்டரோகிகளைக் குணப்படுத்தியவர், குருடர்களுக்குக் கண் தந்தவர் என்பது உண்மையே. வியத்தகு மனிதராய் - இறைவனின் அருள் பெற்றுப் பிறந்தவராய் - இறைப்பணி புரிந்தவராய் இருந்தார்.
அவரது மறைவுக்குப் பிறகு அந்த மந்திர த் தன்மை இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளின் குமாரன் என்ற தத்துவம் உதயமாகி அவரைப் பொருத்தமாக நிலை பெறச் செய்யும் முயற்சிகள் தொடங்கின.
கிரேக்க ரோமன் கடவுள்கள் அற்புத உயர் மனிதர்களாய் மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்துவக் கல்வியாளர்களும், அது போன்ற கருத்துக்களால் தாக்குதல் பெற்றிருந்தனர்.
கிறிஸ்து மார்க்கத்தில் பின்னர் வந்த பவுல் கூட ஹெலன் இன யூதரே. அவர் இயேசுவைப் பார்த்ததுமில்லை. சந்தித்ததும் இல்லை. ஆனால் அவர் கூறிய - எழுதிய அனைத்தும் அந்தக் காலத்து நம்பிக்கைகளால் தாக்கம் பெற்றவையே ஆகும். வாழ்கின்ற தேவன் இயேசு என்ற கூற்றும் பவுலுடையது தான்.
இயேசுவின் அதி அற்புதமான பிறப்பு- அவர் கடவுளின் குமாரன் என்ற தோற்றத்துக்கு அடிப்படை தருவது போல் தோன்றும். 1101ஸ்ரீ2 இரட்டைப் படைத் தத்துவததைக் கொண்டு இதை நிலை நாட்டுகிறார்கள். கடவுள் மேரியின் கர்ப்பத்தில் ஊதினார். மேரி இயேசுவைப் பெற்றார். எனவே இயேசுவின் தந்தை கடவுள்! இயேசு - கடவுளின் குமாரர் என்ற முடிவுக்கு வருகிறார்கள்.
குர்ஆனும் கிறிஸ்துவ நூல்களும் மேரி மனதிலும் உடலிலும் விதிவிலக்காக இருக்கின்ற ஒரு பெரும் தூய்மையுடையவராய் இருந்தார் என்றும் கடவுளுக்குச் சேவை செய்வதற்காக இந்த உலகில் அவர் அர்ப்பணிக்கப்பட்டார் என்றும் தேவாலயத்திலேயே அவர் கடவுள் பணி ஆற்றினார் என்றும் கூறின.
ஆகவே கடவுளின் சித்தப்படி மேரியே கூட அந்தத் தேவாலயத்தில் அதி அற்புதம் புரியும் தகுதி பெறுகிறார். ஆயினம் இறைவன் மேரியைத் தனது புதிய இறைத்தூதரை உருவாக்கும் கருவியாக ஆக்குகிறார். அவரது கற்பின் தூய்மை பற்றி ஒச்சம் (களங்கம், பங்கம்) வராத அளவுக்கு அந்த அற்புதத்தைச் செய்து காட்டுகிறார்.
மேரி தனது இறைவனுக்குப் பணி புரிகிறாள். ஆகவேஇறைவன் தனது அளப்பரிய கருணையால் மேரியின் கற்புக்கு மேன்மை தருகிறார்.
ஆகவே இயேசுவின் பிறப்பு என்பதைக் கடவுளின் குமாரர் உற்பத்தியாகக் கொள்ள வேண்டியதில்லை. இயேசுவின் பிறப்பு - இறைவனின் படைப்பாற்றலின் புதிய முறை. மகன் என்பதோ தந்தை என்பதோ இல்லை. இறைவனின் நோக்கமும் அப்படிப்பட்டதாயில்லை.
இயேசுவின் போதனைகள் அவரது காலத்திலும் அவருக்குப் பின்னர் சிலகாலமும் எழுதப்படவில்லை. வாய் மொழியாக வழங்கி வந்த இயேசு போதனைகள் காலப் போக்கில் மூலப் போதனைகளிலிருந்து மாற்றம் அடையத் தொடங்கின. முதலில் எழுதப்பட்டது மத்தேயு-லூக்கா-மாற்கு ஆகியோரின் ஏற்பாடுகளே! (சுவிசேஷங்களே!)
யோவான் அதற்குப் பின்னர் கடைசியாகத் தான் எழுதுகிறார். அவர் எழுதியது மதக் கிரந்தம் போல் இருந்தது.
மத்தேய-லூக்கா-மாற்கு எழுதியவற்றில் இயேசுவைப் பற்றிய சித்தரிப்பு அமைதியான- கம்பீரமான பாத்திரத்தையே உருவாக்கியது.
ஒரு இறைத்தூதுவராயும், இறைவனால் அற்புதனம் செய்தவராயும் மனிதகுலத்தின் அனைத்து மக்களையும் நேசிப்பவராயும் - இறைவனைப் பற்றிய விழிப்புணர்வைத் தோற்றுவிக்க அனுப்பப்பட்டவராயும் அந்த மூன்று ஏற்பாடுகள் (சுவிசேஷங்கள்) கூறின.
மேலும் இயேசு மனிதராகிய நமது கண்களைத் திறப்பவராயும் - இறைவினன் நினைப்பு வாழ்வின் எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும் என்று நினைவூட்டுபவராயும் - செயல் - எண்ணம் ஆகியவற்றில் தன்னலமற்ற போக்கை உண்டாக்குபவராயும் - கடவுள்ள சத்தியம் ஆகியவற்றின் மீதுள்ள நம்பிக்கையை விரிவுபடுத்துபவராகவும் அவர் இருந்தார்.
குழந்தையைப் போன்ற எளிய செயல்பாடும் நம்பிக்கையுமே இறைவனின் விண்ணரசை மண்ணுக்குக் கொண்டு வர முடியும். இந்தக் கருத்து இயேசுவின் போதனைகளில் பல் முறை வலியுறுத்தப்பட்டது.
இயேசு கடவுளை மிக நெருங்கினவராக இருந்ததற்குக் காரணயே அவரது பிரார்த்தனைகளே! அதிலிருந்தே அவர் அற்புதங்களை நிகழ்த்தும் ஆற்றலைப் பெற்றார். அந்த அற்புதங்களை நான் கடவுளின் குமாரர் என்று கூறிக் கொண்டு செய்யவில்லை. இயேசு பயன்படுத்திய மகன் அல்லது குமாரன் எனும் சொல் மக்கள அனைவரும் இறைவனின் பிள்ளைகள் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டது.
இங்குள்ள ஆண் பெண் அனைவரையும் இறைவனின் குமாரன் அல்லது குமாரத்திகளாகக் கருதி மக்களை பார்த்து அவர் விண்ணகத்திலிருக்கும் நமது தந்தையிடம் பிரார்த்தனை செய்வோம் எனக் கூறினார்.
ஆயினம் புதிய ஏற்பாடுகளிலுள்ள இயேசுவின் சில போதனைகள் நம்பும்படி இல்லை. திரிபோ என ஐயுறும்படி அமைந்திருக்கின்றன. இயேசு பெரும்பாலும் ஏழை – ஒடுக்கப்பட்டோர்- தள்ளி வைக்கப்பட்டோர்- பணியாளர்கள் ஆகியோர் பற்றியே அதிகக் கவலையுற்று இறைப்பணி ஆற்றினார். மதக் கருத்து கலந்த போலியான பக்திச் சாமாச்சாரம் அல்ல.
அவரது அழைப்பு மனித இதயங்களுக்கு விடப்பட்ட அழைப்பு! அவரது கொள்கை – மனித நேயமும் அன்பும்!
இதற்குப் பொருள் தேவாலயங்களை நிறுவுவதா? அவர் தேவாலயம் நிறுவ விரும்பினார். ஆனால் இப்போதிருக்கின்ற தேவாலயங்களைப் போல் அல்ல!
இயேசு ஆன்மீகத்தோடும் இருந்தார். நடைமுறை உலகத்தோடும் இருந்தார். அவர் இறை நம்பிக்கையோடு மக்கள் ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துகின்ற சமுதாயத்தை உருவாக்க விரும்பினார்.
இனம் - கொள்கை பாகுபாடற்ற ஒரு குடும்பம் போன்ற அழகிய உறவுடன் - இறைவனின் வழிகாட்டுதலோடு அமைந்த சமூகமே அவர் அமைக்க விரும்பியது. அவரது போதனைகளைக் கூர்ந்து கவனித்தால் இத்தகைய சமூக அமைபில் அவரே முழுக்க முழுக்க தனி ஒளி வீசுபவராக இருக்க வேண்டும் எனக் கருதியதில்லை. இறைவனின் கைகளிலே உள்ள கருவியாக இயேசு தன்னைக் கருதினார்.
ஆனால் இது கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப டந்த இயேசுவின் எளிய பண்பாடான பாத்திரத்திற்கு முரணானதாகும். மக்களை இறை நம்பிக்கை கொள்ளச் செய்ய இயேசுவுக்கு இறைவன் அளித்த அற்புத சக்தியைத் திசை மாற்றியதுமாகும். இதன் மூலம் கிறிஸ்துவத் தேவாலயங்கள் இயேசுவின் தனித்தன்மையான எளிமையைத் தோற்கடித்து விட்டது ஆகாதா?
திரியேத்துவத்திலும் (பிதா-மகன்-பரிசுத்த ஆவி) தங்களது மதமே உயர்ந்தது எனக் காட்ட நினைக்கிற முயற்சியாகும். இதன் மூலம் இயேசுவை ஒரு புதிராக்கி அதற்கு விளக்கமும் தரப்படுகிறது.
இறைவனின் ஆன்மீக சக்தி என்பது ஆப்ரஹாம், மோஸே காலத்தில் இருந்தது போன்றே முஹம்மது நபி (ஸல்) காலத்திலும் இருந்தது. ஆனால் இந்த திரியேகத்தும் இவர்களின் மீது தத்துவமாகச் சுமத்தப்படவில்லை.
இஸ்லாம் மார்க்கத்தின் வருகையை கிறிஸ்துவர்கள் கள்ளத் தீர்க்கதரிசி அல்லது அந்திக்கிறிஸ்துவின் வருகையாகக் கருதுகிறார்கள் என்பது வேதனைக்குரியது.
இந்த அந்திக் கிறிஸ்துவக் கதை- யோவானின் வெளிப்பாட்டில் கூறப்பட்டுள்ளதால் தான் இந்த நிலை.
ஜெருஸலம் நகருக்காக நடந்த சிலுவைப் போரில் ஒரு ஐரோப்பிய பிரபுவுக்க குர்ஆனில் இயேசு பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பாருங்கள் என்று ஒரு மொழி பெயர்ப்புப் புத்தகம் முஸ்லிம்களால் தரப்பட்ட போது அதை அவர் படிக்காமல் தூர வைத்து விட்டார்.
இது இஸ்லாம் பற்றிய கிறிஸ்துவர்களின் நிராகரிப்பைப் புலப்படுத்தியது. இந்தப் போக்கு இன்றைக்கும் இருந்து வருகிறது.
சிலுவைப் போர்களின் நினைவுகளை இன்னும் உயிர் வாழச் செய்வதன் மூலம் முழுமையான ஞான சூன்யத்தைத் தோற்றுவிக்கிறார்கள்.
இப்போது முஸ்லிம்களின் கடமை தங்களது ஓரிறை நம்பிக்கையை உறுதி செய்து கொள்வதோடு – உண்மையை அறிய விரும்பும் கிறிஸ்துவர்களுக்கு இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை விளக்கததைக் கூற வேண்டும்.
சத்தியத்தையும் உண்மையையும் தேடி அலையும் ஆன்மாக்களுக்கு இஸ்லாமும் அதனுடைய போதனைகளும் பாலைவனத்தில் வற்றாது பாயும் மலை அருவி போன்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
வஸ்ஸலாம்!
தங்களின் உண்மையுள்ள,
ஜஹ்ரா அஜீஸ்.
மேலே உள்ள கடிதம் பற்றி...
இயேசுவின் இறைப்பணி பற்றிய இஸ்லாம் மார்க்கத்தின் கருத்துக்கள் காரணகாரிய விளக்கத்தோடு இருப்பவை. அவரை மிகப் பெரிய இறைத்தூதராக மதிப்பதாகும்.
துடிப்பான சிந்தனையோடு இருக்கும் மக்கள் இயேசு பற்றி இஸ்லாம் கூறுவதை ஒப்புக் கொள்வர்.
எனினும் இஸ்லாம் நோக்கி வருபவர்கள் திறந்த மனதோடும்- சார்பற்ற தன்மையிலும் வந்தால் இஸ்லாம் கூறுகின்ற வாத நேர்மையையும் ஒப்புக் கொள்ள வைக்கிற தன்மையையும் இயேசுவின் விஷயத்தில் காண்பார்கள். இயேசுவைப் பற்றிய பலவிதமான கிறிஸ்துவத் தத்துவங்களோடு வாதிட்டுப் போராடிப் பார்த்தவர்கள் இஸ்லாமியக் கருத்துக்களை நிச்சயமாக ஒப்புக் கொள்வார்கள்.
சவூதி அரேபியாவிலுள்ள தொலைக்காட்சி இரண்டாவது அலைவரிசையில் எனது நிகழ்ச்சி ஒளிபரப்பான போது மேலே உள்ள கடிதம் ஒன்று வரப் பெற்றேன். இஸ்லாம் மார்க்கத்தில் இயேசு என்ற நிகழ்ச்சியைக் குறித்தும் இந்தக் கடிதம் வரப் பெற்றது. கீழ்க்காணும் காரணங்களுக்காக அந்தக் கடிதம் இணைக்கபட்டுள்ளது.
Þ இந்தக் கடிதத்தை எழுதியவர் - மதக் கல்வியில் மாணவராகவும் - அதில் தேர்ச்சி பெற்றவராகவும் உள்ளார்.
Þ இயேசு கிறிஸ்து பற்றிய கிறிஸ்துவர்களின் நம்பிக்கையையும் உணர்ச்சிகளையும் புரிந்தவராக அவர் இருக்கிறார்.
Þ அவர் எப்படி இயேசுவின் போதனைகளிலிருந்தும் இறைச் செய்திகளிலிருந்தும் கிறிஸ்துவர்கள் வழிமாறிச் செல்கிறார்கள் என்றும் எவ்வாறு அவர்கள் இயேசுவின் மீதான நம்பிக்கையில் தவறாக இருக்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார்.
இந்த வெளியீட்டில் அவரது கடிதத்தையும் இணைக்க அனுமதித்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றியைக் கூறிக் கொள்கிறேன்.
- டாக்டர் அல்ஜொஹானி
பொதுச் செயலாளர்
உலக முஸ்லிம் இளைஞர்கள் பேரவை
ரியாத், சவுதி அரேபியா.
(இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர்களுக்கும், மொழி பெயர்ப்பாளர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம

வியாழன், 19 நவம்பர், 2009




தேனீக்கள் (Honey Bee)

E. Usman Ali

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம் பூச்சி (Insect) இனமாகும். இவை இதுவரை ஒரு மில்லியன் எண்ணிக்கைவரை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும் கூட புதிய புதிய வகைகள் கண்டறியப்படுகின்றன. இத்தகைய பிரமாண்ட எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த இனத்தில் மனிதனைக் கடித்து நோயைப் பரப்பி தீங்கை விளைவிக்கக் கூடிய வகைகளும் உண்டு. மனிதனின் இரத்தத்தை உறிஞ்சி வாழக்கூடியவைகளும் உண்டு. மனிதனுடன் போட்டிப் போட்டுக் கொண்டு தாவரங்களை அழித்து பெரும் நாசத்தை ஏற்படுத்தக் கூடிய பல வகைகளும் இருக்கின்றன. இருப்பினும் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மையே பயக்கக் கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இவற்றால் உற்பத்தி செய்யப் படும் தேன், பல நோய்களுக்கு மருந்தாகப் பயனாகின்றது. இத்தகைய பிரம்மாண்ட எண்ணிக்கையில் அமையப் பெற்ற இந்த இனத்தில் மிக அதிக அளவிற்கு அறியப்பட்டவைகளில் தேனீக்களும், எறும்புகளும் முதல் இடத்தை வகிக்கின்றன. இதில் இந்த தேனீக்கள் பல அம்சங்களை விதிவிலக்கான அம்சமாக அமையப் பெற்றுள்ளன. இவற்றைப் பற்றி மிக விரிவான அளவில் ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்ட பல அதிசயத் தக்க விஷயங்கள் நம்மை வியப்படைய வைக்கின்றன.

தேனீக்களின் பூர்வீக பூமி ஆப்பிரிக்காவாகும். அங்கிருந்து ஐரோப்பாவிற்கும் பிறகு ஆசியாவிற்கும் பரவின. காலனி ஆதிக்கத்தின் போது அமெரிக்காவிற்கும் பரவி இன்று அன்டார்டிகாவை தவிர்த்து பூமியின் எல்லாப் பகுதிகளிலும் எல்லா தட்பவெட்ப நிலைகளிலும் தேனீக்கள் காணப்படுகின்றன. 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய தேனீக்களின் உடற்படிவம் மரப்பிசினிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தேனீக்களின் அமைப்பிலேயே மாற்றமின்றியே காணப்படுகின்றன. தேன் கூடு என்பது மூன்று வகையான தேனீக்களின் கூட்டணியாகும். ஒவ்வொன்றும் வெவ்வேறான உடல் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. இதுவே இவற்றின் பிரதான வேறுபாட்டு அம்சமாகும்.

1. இராணித் தேனீ (Queen-Productive Female)
2. ஆண் தேனீக்கள் (Drone)
3. வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee-Non Productive Female)

இம்மூன்றும் மூன்று விதமான உடல் அமைப்பையும் மூன்று விதமான செயல் பாடுகளையும் உடையதாகும். வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டு இவற்றால் உருவாக்கப்படும் கூடு என்ற இவற்றின் ஒரு சமுதாயம் (Colony) நமக்கு விடை பகர முடியாத பல செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும். பொதுவாக ஒரே உயிரினத்தில் பாலினத்தை வேறுபடுத்திக் காட்டும் சில வேறுபாட்டைத் தவிர பெரிய வேறுபாடுகள் எதுவும் காணப்படுவதில்லை. ஆனால் இந்த தேனீக்கள் இனத்தில் விதிவிலக்காக உள்ளுறுப்புக்கள்,`வெளியுறுப்புக்கள் மற்றும் செயல்பாடுகளிலும் குறிப்பிடத்தக்க வேறு பல வித்தியாசமான அம்சங்கள் காணப்படுகின்றன. அவற்றை வரிசைப் படுத்தி காண்போம்.

பொதுவான வேறுபாடுகள்
இராணித் தேனீ ஒரு கூட்டில் ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும் வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக் கணக்கிலும் இருக்கும். இராணித் தேனீ மற்ற இரு வகை தேனீக்களைக் காட்டிலும் அளவில் பெரியதாகும். கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாய் ஆகும். இவற்றால் மட்டுமே முட்டையிட்டு குஞ்சுகளைப் பொறிக்க இயலும். ஆண் தேனீக்கள் இராணித் தேனீக்களை விடச் சற்று சிறியதாகவும், வேலைக்கார தேனீக்கள் மற்ற இரு வகையை காட்டிலும் சிறியதாகவும் இருக்கும். இராணித் தேனீக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இருக்கும். அது இறப்பெய்தும் காலம் வரை மீண்டும் மீண்டும் வளரக்கூடியதாகும். ஆண் தேனீக்களுக்கு கொட்டக் கூடிய கொடுக்குகள் இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் உண்டு. ஆனால் ஒரு முறை கொட்டியதன் பின்னர் திரும்ப வளருவதில்லை.

இராணித் தேனீ சராசரியாக மூன்று வருடங்கள் வரை உயிர் வாழ்கின்றது. ஆண் தேனீக்கள் இராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழக்கின்றன. இவை சராசரியாக 90 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் சராசரியாக 28 நாட்கள் முதல் 35 நாட்கள் வரை உயிர் வாழ்கின்றன. ஆனால் குளிர் காலங்களில் 140 நாட்கள் வரையில் உயிர் வாழக்கூடியன. இராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. ஆனால் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆகின்றது. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களிலிருந்து மகரந்தத் தூளைச் சேகரித்து கொண்டு வர அவற்றின் பின் காலில் மகரந்தக் கூடை (Polan Basket) என்ற உறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பு இராணித் தேனீ மற்றும் ஆண் தேனீக்களுக்கு இல்லை. வேலைக்காரத் தேனீக்களுக்கு பூக்களின் குளுகோஸைத் தேனாக மாற்றக் கூடிய தேன் பை எனும் உள்ளுறுப்பு அமைந்துள்ளது. இந்த அமைப்பும் மற்ற இரண்டு வகை தேனீக்களுக்கும் இல்லை. கூடுகட்ட பயன்படுத்தும் ஒரு வித மெழுகை உற்பத்தி செய்யும் சுரப்பி (Wax Gland) வேலைக்காரத் தேனீக்களுக்கு மாத்திரமே அமைந்துள்ளது. மற்ற இரு வகை ஈக்களுக்கும் இல்லை. இது மட்டுமல்லாது மற்ற சில அம்சங்களும் உண்டு. இப்போது நாம் தேனீக்களை பற்றி விரிவாகத் தெரிந்து கொள்வோம்.

இராணித் தேனீ (Queen)
ஒரு உறையில் ஒரு வாள். இதுதான் இராணித் தேனீயின் சித்தாந்தம். ஒரு கூட்டில் ஒரு இராணித் தேனீதான் இருக்க முடியும். இது அளவில் மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்தவுடன் ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் பறந்து வெளியில் செல்கின்றது. தரை மட்டத்திலிருந்து 1000 அடி உயரத்திற்கு மேல் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் உறவு கொள்கின்றது. அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். இவை இடைவிடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகினறது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகளை இட்டு விரைவில் பொறித்து வெளிவர ஆவணச் செய்யப்படுகின்றது.

முட்டையிலிருந்து வெளிவரும் லார்வாக்களுக்கு தொடர்ந்து ராயல் ஜெல்லி (Royal Jelly) என்னும் உயர் தர ஊட்டச்சத்து திரவம் தரப்படுகின்றது. இந்த திரவம் தொடர்ந்து ஊட்டப்படும் லார்வா இராணித் தேனீயாக உருமாற்றம் அடைகின்றது. இந்த ராயல் ஜெல்லிதான் ஒரு முட்டை வேலைக்காரத் தேனீக்களின் பிறப்பையும் இராணித் தேனீயின் பிறப்பையும் தீர்மானிக்கும் அம்சமாக விளங்குகின்றது. இந்த திரவம் வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பியிலிருந்து சுரக்கக் கூடியதாகும். இந்த திரவம் வேலைக்கார தேனீக்களின் லார்வாக்களுக்கு முதல் இரண்டு நாட்கள் மாத்திரமே தரப்படுகின்றது. ஆனால் இந்த ராயல் ஜெல்லி மட்டுமே இராணித் தேனீயின் வாழ்நாள் முழுவதுமான உணவாகும். அரசர்கள் உண்ணும் அறுசுவை உணவைப் போன்றே இவற்றிற்கும் அரசு மரியாதையுடன் முக்கியத்துவம் தரப்பட்டு இந்த உணவு வழங்கப்படுகின்றது. இவ்வாறு தொடர்ந்து இந்த திரவம் கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. மற்ற தேனீக்களைக் காட்டிலும் 5 முதல் 8 நாட்கள் முன்பாகவே பொறித்து வெளிவருகின்றன. முதலாவதாக வெளிவரும் இராணித் தேனீ போட்டி மனப்பான்மையால் பொறித்து வெளிவரக்கூடிய நிலையில் இருக்கும் மற்ற இராணித்தேனீக்களின் லார்வா அறைகளைத் தாக்கி சேதப்படுத்துகின்றது. இவற்றின் பிறப்பே வாழ்வா! சாவா! என்ற போராட்டத்தின் துவக்கமாகவே அமைந்து விடுகின்றது. வெளிவந்துவிட்ட தன் சகோதரி தேனீக்களுடன் தலைமைத் தனத்திற்காக சண்டையிட்டு ஒன்று இறக்கின்றன அல்லது மற்றவற்றை வெற்றிப்பெற்று இராஜ வாழ்க்கையை எதிர் நோக்கி கூடு திரும்புகின்றன. கடமைக்கு முன்பாக பாசத்திற்கு வேலை இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக பழைய தாய் கிழ இராணித் தேனீயும் புதிய இராணித் தேனீயால் கொல்லப்படுகின்றது. இத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு வெற்றி பெற்று வரும் இராணிக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து தங்கள் கடமையை கண்ணும் கருத்துமாகச் செய்திட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இருப்பதனால் அங்கே புதிய இராஜ்ஜியத்தில் தேனாறு பாயத் துவங்குகின்றது.

ஆண் தேனீ (Drone)
அடுத்து ஆண் தேனீக்களைப் பற்றிப் பார்ப்போம். இவற்றை ஆண் ஈக்கள் என்பதை விடச் சோம்பேறி ஈக்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இவை பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை.நான் ஆண் என்று வீரவசனம் பேச இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து சமர்த்தாக நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. இவை செய்யக் கூடிய உருப்படியான காரியம் என்னவென்றால் புதியதாக பொறித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதுதான். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. மற்றவரை அண்டி வாழ்பவரின் நிலை அதோ கதிதான் என்பது மனித இனத்திற்கும் பொதுவானதுதானே.
வேலைக்காரத் தேனீக்கள் (Workers Bee)
மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, லார்வாக்கள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப் படுகின்றது. இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் இரசாயண மாற்றம் செய்யப்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. இதைத்தான் வல்ல நாயன் தன் தூய வசனத்தில் தெளிவுபடுத்தியுள்ளான். விளக்கம் தேவையே இல்லாத வார்த்தைகளினால் திருமறையின் பரிசுத்தத்திற்கு சான்று பகரும் வார்த்தைகள் இதோ!
அதன் (தேனீக்களின்) வயிற்றிலிருந்து ஒரு பானம் வெளியேறுகின்றது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற மக்களுக்கு இதில் நிறைய அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 16:69)
மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடை பெருகின்றன. கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதுனுடைய விஷப் பையுடன் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விஷப் பையின் வாய் சிதைந்து விஷம் அவற்றின் உடலில் பரவி உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. கூட இருந்தே கொல்லும் நோய் என்றுச் சொல்வார்கள். இங்கோ கூட இருந்தே கொல்லும் விஷம்! இதுதான் தேனீக்களின் நிலை.
தேன் கூட்டின் அமைப்பு"
ஆயிரம் தச்சர்கள் கூடி உருவாக்கும் மண்டபம்", என்று தமிழில் சொல்லப்படும் உவமைக்கு உரியவை தேனீக்கள் கட்டும் கூடாகும். தேனின் கூடு வேலைக்காரத் தேனின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றன. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அருகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்தியாகக் பார்க்க ரசனையை அளிக்கக் கூடிய முறையிலே கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அருகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்புடன் விளங்குகின்றன. பொறியியல் அறிந்த ஈக்கள் போலும்!

இராணித் தேனீயின் லார்வா அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாயிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேனின் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறை சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக இருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ஈக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. மனிதர்களோ ஒரு தலைமைக்கு கட்டுபட்டு நடக்கக் கூடிய தேனீக்களிடம் பாடம் படிக்க வேண்டிய நிலையில் தான் இருக்கின்றோம். என் கடமை பணி செய்து கிடப்பதே! என்பதே இவற்றின் தாரக மந்திரம் ஆகும். ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். இவற்றின் கூடு அதிகமான ஈக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்களால் மரங்களின் பிசினைக் கொண்டு அவற்றில் சில என்ஸைம்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன.

இனப்பெருக்கம்
லார்வாக்களுக்குஒரு நாளைக்கு 1200 முறைகளுக்கு மேல் உணவளிக்கப்படுகின்றது. இராணித் தேனீயின் மூலம் அறைக் கூடுகளில் அறைக்கு ஒன்று வீதம் இடப்படும் முட்டைகள் மூன்று நாட்களுக்குப் பிறகு பொறித்து லார்வாக்கள் வெளிவருகின்றன. இராணித் தேனீக்கென்று வித்தியாசமான வடிவில் நிலகடலை வடிவத்தில் கூடு கட்டப்படுகின்றன. லார்வா நிலையில் அவற்றிற்கு வேலைக்காரத் தேனீக்களினால் ஒருநாளைக்கு 1200 முறைக்கு மேல் உணவு அளிக்கப்படுகின்றது. தங்களது சுய நலத்திற்கல்லாமல் தங்கள் காலனியின் நலனையே கருத்தில் கொண்டு புதிய சந்ததிகளை உருவாக்க வெறித்தனமாக செயல்படும் இந்த செயல் உண்மையில் சிந்திக்கத் தக்க விஷயமாகும். முதல் இரண்டு நாட்களுக்கு வேலைக்கார லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி என்னும் உயர் தர புரத உணவு அளிக்கப்படுகின்றது. இது வேலைக்காரத் தேனீக்களின் சுரப்பிகளிலிருந்து சுரக்கின்றது. அதன் பிறகு மகரந்தத் தூள் மற்றும் தேன் ஆகியவை உணவாக அளிக்கப் படுகின்றது. ஆனால் இராணித் தேனீயின் லார்வாக்களுக்கு ராயல் ஜெல்லி மாத்திரமே உணவாக முழு வளர்சி அடையும் வரை அளிக்கப்படுகின்றது. இத்தகைய வேற்றுமை லார்வா பருவத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப் படுகின்றன. இத்தகைய உயர் தர உணவு தொடர்ந்து கொடுக்கப்படுவதன் மூலம் இவை துரித வளர்சியடைகின்றன. அதன் பிறகு லார்வா முழு வளர்சி நிலையை அடைகின்றது. பின் அறை கூட்டின் மேல் பகுதி மெழுகினால் சீல் வைக்கப்பட்டு மூடப்படுகிறது. அதன் பிறகு அவை PuPa என்னும் கூட்டுப் புழு நிலையை அடைந்து பிறகு முழு வளர்ச்சி அடைந்த நிலையில் அறைக் கூட்டின் மேல் பகுதியை உடைத்து வெளி வருக்கின்றன. இராணித் தேனீ முழு வளர்சியடைந்து வெளிவர 16 நாட்களும் வேலைக்காரத் தேனீக்களுக்கு 21 நாட்களும் ஆண் தேனீக்களுக்கு 24 நாட்களும் ஆகின்றன. பொதுவாக எல்லா நாட்களிலும் சில நூறு அறைகளிலாவது லார்வா நிலையில் உள்ளவைகளுக்கு உணவு அளிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்.

புதிய வரவுகள்
தேனீக்கள் நிமிடத்திற்கு 11,400 முறை சிறகடிக்கின்றது. இவ்வளவு வேகத்தில் சிறகை அசைப்பதனால் ஏற்படும் சப்தம்தான் ஈக்களின் ரீங்காரம்.
வெளி வந்தவுடன் புதிய தேனீக்கள் மூன்று வாரங்கள் வரை கூட்டிற்குள்ளேயே வேலையில் அமர்த்தப்படுகின்றன. கூடுகளைப் பராமரிக்கவும், பழைய லார்வா அறைகளைத் தூய்மைப்படுத்தி அடுத்து முட்டையிட ஏதுவாக்கி வைக்கவும், லார்வாக்களுக்கு உணவளித்து பராமரிக்கவும், வேலைக்காரத் தேனீக்களினால் கொண்டுவரப்படும் தேனை இவை தங்கள் வாயில் பெற்று அதை அதற்கென்று இருக்கும் பிரத்யேகமான அறையில் நிரம்பியதன் பின்னர் அதில் காற்று புகா வண்ணம் இறுக்கமாக (airtight) சீல் வைக்கின்றன. மேலும் இவை கூட்டின் வெப்பம் மிகைத்து விடும் போது நீரை விட்டு சிறகை தொடர்ந்து அசைப்பதன் மூலம் காற்றோட்டத்தை ஏற்படுத்தி வெப்ப நிலையை குறைக்கின்றன. கடுமையான குளிர் காலங்களில் இவை ஒன்றுடன் இறுக்கமாக இணைந்து கூட்டில் இருக்கும் லார்வாக்கள் முறையாக வளர்சியடைய வகை செய்கின்றன. இறுதியாக மூன்று வாரங்ககளுக்குப் பிறகு இவை வெளியே சென்று தேனைச் சேகரிக்க அனுப்பப்படுகின்றன.

தேன் சேகரிப்பு
தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரைப் பயணிக்கும் திறன் கொண்டதாகும். தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்கு கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது. சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். ஏன் என்று சொன்னால் தேனீக்கள் சற்றேறக் குறைய ஒரு லட்சம் கி.மீ வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுகோஸை எடுத்துப் பிறகு சரியாக தங்கள் கூடு திரும்புகின்றன என்று சொன்னால் இறைவா! உன்னுடைய அற்புதம் தான் என்ன அற்புதம். இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எங்ஙனம் இவற்றிற்கு சாத்தியம் ஆயிற்று? இதோ நம் இறைமறை பதில் அளிக்கின்றது

..மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் நீ கூடுகளை அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனி வர்கத்திலும் சாப்பிடு! உன் இறைவனின் பாதையில் எளிதாகச் செல் என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயறுகளிலிருந்த மாறபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கிற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது. (அல்குர்ஆன் 16:68,69)

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி கூட்டிற்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறை வசனம் தெளிவுபடுத்துகின்றது. இதை மறுக்கக் கூடியவர்கள் தங்கள் பகுத்தறிவைக் கொண்டு பதில் சொல்லட்டும். இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் நம் இறைவன். இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். நம் இறைவன் மகா தூய்மையானவன். நம் இறைவன் தான் நாடியவைகளுக்கு ஆற்றலை மிகைப்படுத்தக் கூடியவன் என்பது மீண்டும் இங்கே நிரூபனமாகின்றது.

இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன.
நடன அசைவில் அசாதாரண மொழி
தேனீக்கள் ஆடும் கூத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு. தேனீக்கள் தங்கள் உணவிற்காக வெளியில் சென்று ஏதேனும் புதிய உணவாதாரத்தைக் கண்டறிந்தால் கூட்டிற்குத் திரும்பி அந்த இடத்தைப் பற்றிய துல்லியமான தகவல்களை வித்தியாசமான உடல் அசைவின் மூலம் தெரிவிக்கின்றன. உதாரணமாக உணவின் இருப்பிடம் 100 கஜத்திற்கு(yards) உட்பட்ட இடத்தில் ஒரு தேனீயால் கண்டுபிடிக்கப்பட்டால் அது முதலில் அந்த மலரின் குளுகோஸை உறுஞ்சி தன் தேன் பையில் சேகரித்து கூடு திரும்புகின்றன. திரும்பியவுடன் கூட்டில் முதலில் இரண்டு செ.மீ அளவிற்கு சிறிய வட்டமாக (round dance) சுற்றுகின்றது. பின்னர் படிபடியாக சுற்றை பெரிதாக்கி சுற்றுகின்றது. பின்னர் அந்த சுற்றுக்கு எதிர் திசையில் சுற்றுகின்றது. இப்போது அதனுடன் இணைந்து மற்ற ஈக்களும் அந்த நடனத்தில் இணைந்துக் கொள்கின்றன. பின்னர் புதிய இடத்தை கண்டறிந்த தேனீயால் கொண்டு வரப்பட்ட மலரின் மகரந்தம் மற்றும் மலரின் குளுகோஸ் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து அது எத்தகைய தாவரம் என்பதை உறுதி செய்து கொள்கின்றன. பின்னர் கூட்டை விட்டு வெளியேறி 100 கஜத்திற்க்குள் பெரிய வட்டம் அடித்து உணவின் இருப்பிடத்தைக் கண்டறிகின்றன. இதே நேரத்தில் 100 கஜத்திற்கு அப்பால் உணவாதாரம் இருக்குமேயானால் தற்போது வேறுவிதமாக நடனத்தை அரங்கேற்றுகின்றன.
தங்கள் பின்புறத்தை அசைத்தபடி(waggle dance) மையத்திலிருந்து நேராக சென்று பின்னர் அறைவட்டம் அடித்து அதற்கு எதிர் திசையில் அதைப் போன்றே சுற்றுகின்றன. மேலும் மிக அதிக தொலைவு என்றால் இவை சூரியனின் இருக்கும் திசையையும் உணவு இருக்கும் திசையையும் ஒரு காம்பசின் அமைப்பில் திசையை துல்லியமாக தெரிவிக்கின்றன. இவை கணிதம் அறிந்த ஈக்கள் என்று தவறாக நினைக்க வேண்டாம். எல்லாம் நம் இறைவன் ஜீன்களைக் கொண்டு நடத்தும் ஜால வித்தைகள்தான் இவைகள். இந்த முறையில் 10 கிலோ மீட்டர் தொலைவின் இருப்பிடத்தை கூட இவைகளினால் இந்த அதிசய முறையினால் மற்றவற்றிற்கு தெளிவுபடுத்த இயலுகின்றது. யார் இவைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தது? என்ன ஒரு திட்டமிட்ட பிரமிக்க வைக்கும் செயல்பாடுகள். இத்தகைய நடன அசைவுகளை வெளிச்சம் அறவே இல்லாத அடர்ந்த இருளிலும் அவைகளினால் எப்படி அறிந்துக் கொள்ள முடிகின்றது என்பது இதுவரை புரியாத புதிராகவே இருந்து வருகின்றது.
தவறுதலின் பலன்தான் கில்லர் தேனீக்கள் (KILLER BEE)
1950 ஆண்டு பிரேசில் விஞ்ஞானிகளுக்கு அதிக தேன் கொடுக்கக் கூடிய ஐரோப்பிய தேனீக்களையும் அதிக வெப்பத்தைத் தாங்கி தேனை உற்பத்தி செய்யும் ஆப்ரிக்கத் தேனீயையும் சேர்த்து கலப்பினம் செய்தால் தங்கள் நாடான பிரேசில் நாட்டின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஒரு ரகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் விளைவாக புதிய ரகம் உருவாக்க ஆப்பிரிக்க இராணித் தேனீக்கள் சிலவற்றை பிடித்து பிரேசில் கொண்டு சென்றார்கள். ஆனால் அவற்றில் சில ஈக்கள் தப்பித்து காட்டுக்குள் சென்றுவிட்டன. இந்த ஆப்ரிக்க தேனீக்கள் மிக அதிக அளவிற்கு பாதுகாப்பு உணர்வுக் கொண்டதாகும். மற்ற வகை தேனீக்களைக் காட்டிலும் மிக வேகமாக இவை பறக்கக் கூடியவை. இங்குதான் பிரச்சனை ஆரம்பமாகியது. இவை தங்கள் கூட்டை தாக்க வரும் எதிரிகளை மாத்திரம் அல்லாது அதன் சுற்று புறத்தில் வந்தால் கூட கொத்த ஆரம்பித்துவிடும். மற்ற தேனீக்களை விட எதிரி மூன்று மடங்கு தொலைவில் வரும் போதே இவை தாக்கும் தொழிலில் இறங்கி விடுகின்றன. ஆப்ரிக்காவின் அதிக வெப்ப நிலையைத் தாங்கிய இவைகளுக்கு தென் அமெரிக்கா கண்டத்தின் மிதமான வெப்ப நிலையை தாங்கி பரவிச் செல்வதில் எந்தச் சிரமமும் இருக்கவில்லை. இவற்றின் இராஜ்ஜியம் தங்கு தடையின்றி பரவிச் சென்றது.
இவை வருடத்திற்கு 500 சதுர மைல்கள் வீதம் தங்கள் பரப்பளவை விஸ்திகரித்துக் கொண்டே செல்கின்றன. இதன் விளைவாக 1950ல் ஆரம்பித்த இவற்றின் பரவல் 1990ம் ஆண்டு அமெரிக்காவை எட்டிவிட்டது. 40 ஆண்டு காலத்தில் தென் அமெரிக்காவை கடந்து வட அமெரிக்காவை எட்டிவிட்டன. மேலும் இவை பரவிக்கொண்டே செல்கின்றன. இவற்றால் ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றார்கள். இவை 1990 ஆண்டு முதன்முதலாக அமெரிக்காவில் காணப்பட்டது. அவை டெக்ஸாஸிலிருந்து மெக்ஸிகோவிற்கும் பிறகு 1994ம் கலிஃபோர்னியா மகாணத்திற்கும் பரவின. உலக நாடுகளை அச்சுறுத்தி ஆக்கிரமிப்பு செய்யும் அமெரிக்கவில் இவை சப்தமின்றி தங்கள் ஆக்ரமிப்பைத் தொடர்கின்றன. இன்னும் 50 ஆண்டுகளில் முழு அமெரிக்காவும் ஆக்கிரமிக்கக் கூடிய அபாயம் இருக்கின்றது. மெக்ஸிகோவிலும் அர்ஜெண்டினாவிலும் இவைகளினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் உண்டு. அமெரிக்காவைப் பொறுத்தவரை உயிர்இழப்பு ஏற்படாவிடினும் 1990 ஆண்டு அதிகபடியான நபர்கள் இவற்றால் கடிக்கப்பட்டு பாதிக்கப்பட்டனர்.
தேன்
தேன் என்பது குளுகோஸ், புரக்டோஸ், நீர், மற்றும் சில என்ஸைம்கள் சிலவகை எண்ணெய்கள் ஆகியவை அடங்கியதாகும். இவை மலரிருந்து கொண்டு வரும் குளுகோஸ் 40 சதவிகிதம் முதல் 80 சதவிகிதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் இவை உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவிகிதமே நீர் இருக்கும். இவற்றின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அந்த பகுதியில் அமைந்திருக்கும் தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சல் நிறமுடையதாய் இருக்கும். வெளிர் மஞ்சள் நிற தேன் தரம் வாய்ந்ததாய் இருக்கும். ஆரஞ்சு மரத்தின் பூக்களைக் கொண்டு தேனீக்களினால் உருவாக்கப்படும் தேன் முதல் தரமானதாகக் கருதப்படுகின்றது. குறைந்த தரம் வாய்ந்த தேன் பஹ்வீட் (Buckwheat) என்னும் தாவரத்திலிருந்து பெறப்படும் தேனாகும். ஏனெனில் அந்த தேன் அடர்ந்த மஞ்சள் நிறமானதாய் இருக்கும். தேனைக் கொண்டு மனிதர்கள் பயன் பெறவே எல்லாம் வல்ல நம் இறைவன் இவற்றை நமக்கு வசப்படுத்தி தந்துள்ளான். அவன் கருணையாளன்.

உலகம் முழுதும் தேனீக்கள் பொருளாதார ரீதியாக செயற்கை முறையில் (Bee Keeping) வளர்க்கப் படுகின்றது. நல்ல பொருளாதாரத்தை ஈட்டிக்கொடுக்கக் கூடிய தொழிலாகவும் இது விளங்கிவருகின்றது. நல்ல ஆரோக்கியமான கூட்டில் 14 முதல் 23 கிலோ வரை தேன் சேகரிக்கப்படுகின்றது. இவை தங்கள் குளிர்கால உணவுத் தேவையைக் காட்டிலும் மிக கூடுதலாகும். இவற்றின் மிஞ்சிய தேன் எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றின் உயிர் தேவைக்கான கொஞ்சம் தேன் விட்டு வைக்கப்படுகின்றது. உலகத்தின் தேன் தேவையை பெருமளவிற்கு செயற்கைத் தேன் வளர்ப்பின் மூலமே சரிகட்டப்படுகின்றது. 8 முதல் 10 பவுண்டு தேனை சேகரிக்கும் போது அந்த கூட்டிலிருநது 1 பவுண்டு எடையுடைய தேன் மெழுகு கிடைக்கின்றது. தேன் என்பது ஒரு தூய கார்போ-ஹைட்ரேட் உணவாகும். இவை பல மருத்துவப் பயன்பாட்டிற்கு உதவுகின்றன. இது நிறைய கலோரி நிறைந்ததாகும். உதாரணத்திற்கு ஒரு அவுன்ஸ் தேன் மூலம் ஈக்களுக்கு கிடைக்கும் ஆற்றல் ஒரு முறை உலகைச் சுற்றி வரப் போதுமானதாகும். இந்த தேன் மற்ற திரவத்தைக் காட்டிலும் அடர்த்தி நிறைந்ததாகும். ஒரு குவளை சர்க்கரை நீரின் எடை சுமார் 7 அவுன்ஸ் ஆகும். ஆனால் ஒரு குவளைத் தேனின் எடை 12 அவுன்ஸ் ஆகும். ஏறக்குறைய இருமடங்கு எடையாகும்.
தேனின் இதர பயன்கள்
இந்த பூமிக் கோளின் தாவரப் பரவலுக்கு தேனீக்களின் பங்கு மிக இன்றியமையாததாகும். அமெரிக்காவில் மாத்திரம் நான்கில் ஒரு பங்கு தாவரம் தேனீக்களினால் இனப்பெருக்கம் அடைகின்றன. இது அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்கும் உள்ள பொதுவான பயனாகும். இவற்றினால் ஏற்படும் பயன்பாட்டின் மதிப்பு அமெரிக்காவில் மாத்திரம் 200 பில்லியன் டாலர் வரை இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை உதாரணமாக குறிப்பிடுவதை குறையாக எண்ணுபவர்கள் தயவு செய்து தவறாக எண்ண வேண்டாம். ஏன் என்று சொன்னால் இத்தகைய புள்ளி விபரங்களை சேகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொள்ள இவர்களுக்கே போதிய கால அவகாசமும் பொருளாதாரமும் இடம் தருவதனால் இத்தகைய புள்ளி விபரங்கள் இவர்களிடமிருந்து கிடைக்கப்பெருகின்றன என்பதல்லாமல் வேறு ஒரு காரணமும் இல்லை.
இறைவனின் ஒப்பற்ற ஏற்பாட்டின்படி இவை நமக்கு இனிய தேனை மருத்துவப் பயன்பாட்டிற்கு நல்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல அவசியத்தையும் இவற்றில் வைத்த நம் இறைவன் போற்றுதலுக்குறியவன்! புகழுக்குறியவன்! பகுத்தறிவு என்பது இறைவன் மனிதனுக்கு பிரத்யேகமாகக் கொடுத்துள்ளது போன்றே மற்ற சில உயிரினங்களுக்கும் இறைவன் தன் அருட்கொடையின் மூலம் வியக்கத்தக்க அம்சங்களை வைத்துப் படைத்துள்ளான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரியதாக நினைக்கின்றான். இருப்பினும் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்கள் பெற்றிருக்கும் அபரிதமான ஆற்றல்கள் பல இவனைக் கொண்டு சாத்தியமற்றதாக இருப்பதை நடுநிலையோடு உணர்ந்து இறைவனின் வல்லமையை ஏற்று அவனுக்கு கட்டுப்பட்டு வாழ கல்வி ஞானத்தை வேண்டுவோம். நேர் வழி செல்வோம்.
நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும் இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும் மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும் வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும் அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும் வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 2:164 )
(நபியே)கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும் அவர்களது உள்ளங்கள் அவனுக்கு பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கின்றான்) நம்பிக்கைக் கொண்டோருக்கு அல்லாஹ் நேர் வழியைக் காட்டுகின்றான். (அல்குர்ஆன் 22:54)
வல்லவனின் வான்மறை திருகுர்ஆன். அற்புதத்தையே இறக்கியிருக்கின்றது அல்லாஹ் மகா தூய்மையானவன். உண்மையை அறியும் நோக்குடன் அல்லாஹ்வுடைய திருவேதத்தை ஒருவர் நாடுவாரேயானால் அங்கு நிச்சயமாக நிறைய சான்றுகளையும் அவனுடைய வல்லமையையும் அவர் காண்பார்.

புதன், 18 நவம்பர், 2009

Ahmad Baqavi
காலத்தால் முரண்படாதது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.இந்தக் கால கட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.
இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு தான் பெரிய மேதையாக
இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.இதற்கு காரணம் நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்? என்னென்ன கண்டு பிடிக்கப்படும்? என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது.பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும . ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறை வேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.
திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும்பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்றஅதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.அது போல் மனிதன் உயிரினங்கள், தாவரங்கள், மலைகள், கடல் களைப் பற்றிப் பேசுகிறது. அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரைகண்டுபிடிக்கப் படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது
இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்றஅரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர்ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார்.
முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக்கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங் களையும் ஆய்வுசெய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவதுமுஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு
ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.
குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம். முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன.
எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தை யாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34)
இந்த அறைகூவல் 14நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை.
இது வரை ஒரு சொல் கூட மாற்றப்படவில்லை.

{فَانطَلَقَا حَتَّى إِذَا أَتَيَا أَهْلَ قَرْيَةٍ اسْتَطْعَمَا أَهْلَهَا فَأَبَوْا أَن يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَاراً يُرِيدُ أَنْ يَنقَضَّ فَأَقَامَهُ قَالَ لَوْ شِئْتَ لَاتَّخَذْتَ عَلَيْهِ أَجْراً }الكهف18:77
أبوا أن يضيفوهما ( أتوا أن يضيفوهما
நபி மூஸா (அலை) அவர்கள் கிள்ரு (அலை) அவர்களுடன் ஒரு நகரத்திற்குச் சென்று சில சேவைகள் செய்துவிட்டு அம்மக்களிடம் உணவு கேட்டபோது ” ஃஅபவ் அன் யுளய்யிபூஹ{மா” அவர்கள் அவ்விருவருக்கும் உணவளிக்க மறுத்துவிட்டனர். இந்தச் செய்தி குர்ஆனில் 18:77ல் வருகிறது.பிற்காலத்தில் ”அந்தாக்கியா” என்ற நகரை ஆண்டுவந்த மன்னனுக்கு தமது நாட்டைப் பற்றிய மக்கள் இறுதிநாள் வரை எண்ணிக் கொளவார்களே எனக்கருதி அதில் ஒரு சிறிய மாற்றம் செய்ய விரும்பி அறிஞர் ரெமுக்களை அழைத்து அதில் ஒரே ஒரு புள்ளியை மேலே சேர்த்துவிட்டால் நமதூருக்கு பெருமை வருமல்லவா என வேண்டிக் கொண்டார்.
” அபவ்” என்ற சொல்லில் உள்ள ”பாவின்” கீழே உள்ள எழுத்தில் வரும் ஒருபுள்ளியை மேலே எழுதி ஒரே ஒரு புள்ளிளைச் சேர்த்துவிட்டால் ‘‘அதவ் “ அதாவது அவர்களுக்கு விருந்தளிக்க முன் வந்தார்கள் என்ற பெருமை கிடைக்குமல்லவா? என விளக்கமளித்துந் கூறினார். அதைக் கண்டு வெகுண்டெழுந்த உலமாக்கள் வல்ல நாயனின் வாசகத்தில் ஒருபுள்ளியைக்கூட கைவைக்கக் கூடாது என குரல் எழுப்பினர். உடனே அந்த முயற்சி கைவிடபபட்டது.எவராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.
அடுக்கு மொழி :
நிரோட்க வாக்கியங்கள் (கவிதைகள்)மாலை மாற்று அணி ( ஆங்கிலத்தில் Pயடடiனெசழஅந)புள்ளி உள்ள எழுத்துகளால் வார்த்தைகள்- கவிதைகள்புள்ளி இல்லாத எழுத்துகளால் வார்த்தைகள்- கவிதைகள் ஒரு மொழியின் எல்லா எழுத்துகளையும் ஒரு சொற்றொடரில் அமைத்துக்காட்டும் அணி நயம் ஆங்கிலம் போன்ற சில மொழிகளில் உண்டு. இதற்கு Pயபெசயஅ என்பார்கள் ஆல இமரான் தும்ம அன்ஸல எனத் தொடங்கும் 154 வது வசனம், பதஹ் அத்தியாயத்தில் முஹமதூரஸுலுல்லாஹ் எனத் ;தொடங்கும் 29 வது வசனம்
{ثُمَّ أَنزَلَ عَلَيْكُم مِّن بَعْدِ الْغَمِّ أَمَنَةً نُّعَاساً يَغْشَى طَآئِفَةً مِّنكُمْ وَطَآئِفَةٌ قَدْ أَهَمَّتْهُمْ أَنفُسُهُمْ يَظُنُّونَ بِاللّهِ غَيْرَ الْحَقِّ ظَنَّ الْجَاهِلِيَّةِ يَقُولُونَ هَل لَّنَا مِنَ الأَمْرِ مِن شَيْءٍ قُلْ إِنَّ الأَمْرَ كُلَّهُ لِلَّهِ يُخْفُونَ فِي أَنفُسِهِم مَّا لاَ يُبْدُونَ لَكَ يَقُولُونَ لَوْ كَانَ لَنَا مِنَ الأَمْرِ شَيْءٌ مَّا قُتِلْنَا هَاهُنَا قُل لَّوْ كُنتُمْ فِي بُيُوتِكُمْ لَبَرَزَ الَّذِينَ كُتِبَ عَلَيْهِمُ الْقَتْلُ إِلَى مَضَاجِعِهِمْ وَلِيَبْتَلِيَ اللّهُ مَا فِي صُدُورِكُمْ وَلِيُمَحَّصَ مَا فِي قُلُوبِكُمْ وَاللّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ }آل عمران154
{مُّحَمَّدٌ رَّسُولُ اللَّهِ وَالَّذِينَ مَعَهُ أَشِدَّاء عَلَى الْكُفَّارِ رُحَمَاء بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعاً سُجَّداً يَبْتَغُونَ فَضْلاً مِّنَ اللَّهِ وَرِضْوَاناً سِيمَاهُمْ فِي وُجُوهِهِم مِّنْ أَثَرِ السُّجُودِ ذَلِكَ مَثَلُهُمْ فِي التَّوْرَاةِ وَمَثَلُهُمْ فِي الْإِنجِيلِ كَزَرْعٍ أَخْرَجَ شَطْأَهُ فَآزَرَهُ فَاسْتَغْلَظَ فَاسْتَوَى عَلَى سُوقِهِ يُعْجِبُ الزُّرَّاعَ لِيَغِيظَ بِهِمُ الْكُفَّارَ وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ مِنْهُم مَّغْفِرَةً وَأَجْراً عَظِيماً }الفتح29
திருக்குர்ஆனைப் பொறுத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும்பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.
பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்றஅதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்து பேசும்போது, இந்த நூற்றான்டின் மாமேதையும் வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விடஅழகாகப் பேசுகிறது.
தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை. அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரைகண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.
இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர்ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.
ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்க ளையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.
அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்குஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது. குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.
முஹம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன. எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தை யாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34) இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை.

யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.முஹம்மது நபியவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.
அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.முஹம்மது நபி அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு. ஏனெனில் நபிகள் நாயகத்துக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர். பல காரணங்களால் இது தவறாகும்.
மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் குர்ஆன் கூறுகிறதே தவிர யூதகிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை. இவர் அவரைப் பெற்றார், அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க
வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்க ளாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது. இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபியவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.
யூத கிறித்தவ வேதங்களில் மிகப் பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளும் மட்டுமே உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும காணப்படவில்லை. ஆனால், திருக்குர்ஆன் மிகக் குறைந்த அளவில் மனிதர்கள் படிப்பினை பெற தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது.

மேலும் மனிதன் சந்திக்கின்ற அனைத்துப்பிரச்சனைகளிலும் ஏற்கத் தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையற்றதாகும். மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத கிறித்தவ மக்களும் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத் தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழி காட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது. எனவே முற்றிலும் இது இறைவன் புறத்திலுருந்து நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.
எதிர்பார்ப்புகள் இல்லை
முஹம்மது நபி அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தார் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு
நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும்.தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த லாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும் நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர். எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம்.
இருக்கின்ற செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும். அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும்
அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள். பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம்.

பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்தவர் இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன் வர மாட்டார். ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளா தாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது.
• இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை.
• அரண்மனையில் வசிக்கவிலிலை.
• கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள்.
• அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார
சாப்பிடவில்லை.
• ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும்,
தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே
மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன.
• வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை.
இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.
• தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள்.
• ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச்சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது எனடறு பிரகடனம் செய்தார்கள். நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார். மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகத்திலிருந்து விடுபடுவார். புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.
• ‘கடவுள் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது
எனக்குத் தெரியாது’
• ‘என்னிடம் கடவுளின் பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது’
• ‘தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது’
• ‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’
என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கட்டளையிடுகிறது. நீர் எப்படி மனிதருக்கு அஞ்சுகிறீர் எனக்கு ஏன் அஞ்சவில்லை என்று கடவுள் தம்மைக் கண்டித்ததாகக் கூறினார்கள். கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் கடிந்து கொண்ட போது, அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் அவரிடம் தான் நடந்து கொண்ட முறையை இறைவன் கண்டித்ததாகக் கூறினார்கள். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் தமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்பைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள்.
தானே கடவுள் என்று அறிவித்தாலும் நம்பும் அளவுக்கு மக்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தும் தம்மையும் அவர்களைப் போன்ற மனிதராகவே கருதினார்கள். இந்த விபரங்கள் யாவும் இறைச் செய்தி என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன.
தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று
சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகத்தின் கற்பனையாகவே இருக்கவே
முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
• அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை!
• அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை!
• காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!
• தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!
• ‘இயேசுவை மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப்
புகழாதீர்கள்’ என்று எச்சரித்தார்கள்!
மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர்
விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை.
மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகக் கடவுள் வார்த்தை என்று கற்பனை செய்தார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.
{الَّذِينَ يَتَّبِعُونَ الرَّسُولَ النَّبِيَّ الأُمِّيَّ الَّذِي يَجِدُونَهُ مَكْتُوباً عِندَهُمْ فِي التَّوْرَاةِ وَالإِنْجِيلِ يَأْمُرُهُم بِالْمَعْرُوفِ وَيَنْهَاهُمْ عَنِ الْمُنكَرِ وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَآئِثَ وَيَضَعُ عَنْهُمْ إِصْرَهُمْ وَالأَغْلاَلَ الَّتِي كَانَتْ عَلَيْهِمْ فَالَّذِينَ آمَنُواْ بِهِ وَعَزَّرُوهُ وَنَصَرُوهُ وَاتَّبَعُواْ النُّورَ الَّذِيَ أُنزِلَ مَعَهُ أُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ }الأعراف157
{قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللّهِ إِلَيْكُمْ جَمِيعاً الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالأَرْضِ لا إِلَـهَ إِلاَّ هُوَ يُحْيِـي وَيُمِيتُ فَآمِنُواْ بِاللّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ }الأعراف158
{هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولاً مِّنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِن كَانُوا مِن قَبْلُ لَفِي ضَلَالٍ مُّبِينٍ }الجمعة2
وَمَا كُنتَ تَتْلُو مِن قَبْلِهِ مِن كِتَابٍ وَلَا تَخُطُّهُ بِيَمِينِكَ إِذاً لَّارْتَابَ الْمُبْطِلُونَ 29:48 ( اذا لارتاب المبطلون)
وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ وَلَـكِن تَصْدِيقَ الَّذِي بَيْنَ يَدَيْهِ وَتَفْصِيلَ الْكِتَابِ لاَ رَيْبَ فِيهِ مِن رَّبِّ الْعَالَمِينَ{10:37 }
அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள். அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று கூறுகின்து. அல்குர்ஆன் 10:37-38
அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையா ளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 11:13
(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும். நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.’ அல்குர்ஆன் 11:35

وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لاَ يَرْجُونَ لِقَاءنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَـذَا أَوْ بَدِّلْهُ قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاء نَفْسِي إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (يونس15 )
அவர்கள் மீது (அந்த மக்கள் மீது) தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை (மறுமை நாளை)நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும் அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு பதிலாக மூன்று விசயங்களை தெளிவு படுத்துமாறு முஹம்மது நபிக்கு இறைவன் கட்டளையிடுகிறான்.

1. قُلْ مَا يَكُونُ لِي أَنْ أُبَدِّلَهُ مِن تِلْقَاء نَفْسِي ‘என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை,
2. إِنْ أَتَّبِعُ إِلاَّ مَا يُوحَى إِلَيَّ .என் மீது வஹீயாக (இறை தூதாக) அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை,
3.إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்றும்(நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 10:15
அடுத்து அவர் உம்மீ எழுதப்படிக்கத் தெரியாதவர் எனவும் குர்ஆன் 7:157,7:158, 62:2 மிகத் தெளிவாகவே கூறுகிறது. மேலும்
وَمَا كَانَ هَـذَا الْقُرْآنُ أَن يُفْتَرَى مِن دُونِ اللّهِ
இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை
செய்யப்பட்டதன்று, (அல்லாஹ்வே அதை அருளினான்.) 10:37